india

img

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

புதுதில்லி தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப் பாளருமான அரவிந்த் கெஜ்ரி வாலுக்கு மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தொடர்பு இருப்ப தாகக் கூறி அவர் அமலாக்கத்துறை யால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மக்களவை தேர்தல் சமயத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் உச்சநீதி மன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. தேர்தல் முடிந்த பின்னர் கெஜ்ரிவால் ஜூன் 2 அன்று மீண்டும் திகார் அறையில் அடைக் கப்பட்டார். அதன்பிறகு கெஜ்ரிவா லுக்கு ஜூன் 20 அன்று தில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து அமலாக்கத் துறை தில்லி உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியது. இந் நிலையில், அடுத்த 4 நாள்களில் அதே மதுபான வழக்கில் கெஜ்ரிவாலை சிபிஐ தனியாக கைது செய்தது.

இந்நிலையில், அமலாக்கத் துறை கைதுக்கு எதிரான கெஜ்ரி வாலின் ஜாமீன் கோரிக்கை மனுவை வெள்ளியன்று விசாரித்தது உச்ச நீதிமன்றம். நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இருதரப்பு வாதங்களை கேட்ட பின்பு,”தில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஏற்கனவே 90 நாள்கள் சிறை தண்டனை அனு பவித்திருப்பதாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதாலும் அவருக்கு இடைக் கால ஜாமீன் வழங்கப்படுகிறது. கெஜ்ரிவால் மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட தலைவர் மற்றும் தில்லி யின் முதல்வர் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இது மிக முக்கியத்துவம் வாய்ந்த செல்வாக்கு மிகுந்த பதவி. எனவே நாங்கள் தில்லி முதல்வர் பதவி தொடர்பாக எந்த வழிகாட்டுதலையும் வழங்க விரும்பவில்லை. ஏனெனில் மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவ ரைப் பதவி விலக வேண்டும் என்றோ அல்லது முதல்வராகவோ, அமைச்சராகவோ செயல்படக் கூடாது என்றோ நீதிமன்றத்தால் உத்தரவிட முடியுமா என்று எங்க ளுக்குச் சந்தேகம் வலுவாக இருக் கிறது. அதனால் கெஜ்ரிவால் முதல் வராக தொடர வேண்டுமா? இல்லை, ராஜினாமா செய்ய வேண்டுமா? என் பதை அவரது விருப்பத்திற்கே விட்டு விடுகிறோம்” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறினர்.  

சிறையில் இருந்து விடுதலை ஆக முடியாது

கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை தொடுத்த வழக்கில் மட்டுமே உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால் சிபிஐ தொடுத்துள்ள வழக்கில் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார். இது தொடர்பான வழக்கு ஜூலை 17 அன்று விசாரணைக்கு வருகிறது. உச்சநீதி மன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி னாலும் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தால் மட்டுமே கெஜ்ரிவால் விடுதலை ஆக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி அரசு மீது வலுக்கும் சந்தேகம்
கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐயை ஏவவிட்டது அம்பலமானது

ஆம் ஆத்மி கட்சியை ஒடுக்கவும், தில்லியில் ஆட்சியை கவிழ்க்கும் முனைப்பிலும் மோடி அரசின் தூண்டுதலால் அரவிந்த் கெஜ்ரி வால் மார்ச் 21 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 

50 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு மே 10 அன்று மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. தேர்தல் முடிந்தவுடன் 21 நாட்களுக்குப் பிறகு ஜூன் 2 அன்று கெஜ்ரிவால் மீண்டும் தில்லி திகார் சிறையில் சரணடைந்தார். அதன்பின் ஜூன் 20 அன்று தில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால் அதற்கு அடுத்த நாளே அமலாக்கத்துறை தில்லி உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியது. கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது தொடர்பாக சட்டவல்லுனர்கள்,” கெஜ்ரிவா லுக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் தடை விதித்தாலும், 90 நாட்களுக்கு அவரை சிறையில் தொடர்ந்து அடைக்க முடியாது” என கருத்து கூறினர்.

இந்த தகவல் வெளியான அடுத்த 5 நாட்களில் மதுபானக் கொள்கை வழக்கை கையில் எடுத்த சிபிஐ, கெஜ்ரிவாலை சிறையிலேயே கைது செய்தது. இதன் பின்னணி என்னவென்றால் சட்டத்தின் மூலம் கெஜ்ரிவா லுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கும் என மோடி அரசு உணர்ந்து, கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐயை ஏவியுள்ளது. அமலாக்கத்துறையைப் போலவே மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ தனியாக கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது உச்சநீதிமன்றம் அமலாக் கத்துறை வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் சிபிஐ வழக்கு நிலுவையில் இருப்பதால் கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுதலையாக முடியாத நிலைமையில் உள்ளார். இந்த திட்டம் எல்லாம் மோடி அரசின் ஏற்பாடே என்றும், அதன் மூலமாக அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்புகள் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றன என்றும் தற்போது அம்பலமாகியுள்ளது.