சென்னை, பிப்.18-
சிறுபான்மை சமூக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான அறிவிப்புகளை வெளியிட்ட அரசுக்கும், முதலமைச்சருக்கும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நலக்குழுவின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் 17.2.2024 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறு பான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், சிறு பான்மை சமூக மாணவர்களின் கல்வி வளர்ச்சி சார்ந்தும், சிறு பான்மை மக்களின் கோரிக்கை களை நிறைவேற்றும் வகையிலும் பல அறிவிப்புகளையும் வெளி யிட்டுள்ளார்.
சிறுபான்மையினர் கல்வி நிறு வனங்களுக்கு வாழ்நாள் அங்கீகா ரம் வழங்கப்படும் வகையில் நிரந் தர சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் வழங்கப்படும் என்று ஏற்கெனவே தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு அரசாணையும் வழங்கப்பட்டிருந்தது.
தற்போது அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளி களில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயிலும் மாணவிகள் ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் சேர்க்கப்பட்டு அதற்கான பலன்கள் வழங்கப் படும் என்ற அறிவிப்பை வெளி யிட்டுள்ளார். மேலும் கிராமப்புறங் களில் உள்ள அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளி களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந் தாம் வகுப்பு வரை பயிலும் மாண வர்களுக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பை யும் வெளியிட்டுள்ளார்.
சிறுபான்மையினர் மாணவர் களுக்கு வழங்கி வந்த பிரீ மெட்ரிக் உதவித் தொகையினை ஒன்றிய அரசு 2022- 23 முதல் நிறுத்திவிட்ட நிலையில் ஒன்றிய அரசால் நிறுத் தப்பட்ட கல்வி உதவித் தொகை, ஒன்று முதல் எட்டு வரை பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவ - மாணவியர்களுக்கு, தமிழ் நாடு வக்பு வாரியம் மூலம் வழங் கப்படும் என்றும், இதன் மூலம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 256 முஸ்லிம் மாணவியர்கள் பயன்பெறு வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் மற்றும் கூட்டு றவு வங்கிகள் மூலம் சிறுபான்மை யினர் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப் படும் என்ற அறிவிப்பும் வெளியிடப் பட்டுள்ளது.
நீண்டகாலம் சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகள் தமிழக அரசால் ஏற்கனவே விடுதலை செய் யப்பட்டுள்ள நிலையில் மேலும் 11 முஸ்லிம் சிறைவாசிகளை விடு தலை செய்யும் முடிவு எடுக்கப் பட்டு, அதற்கான பரிந்துரை ஆளு நர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள அறிவிப்பை யும் தமிழக முதல்வர் வெளியிட்டுள் ளார்.
சிறுபான்மையினர் வழி பாட்டுத் தலங்களின் பராமரிப்பிற் கான அனுமதியை சிரமமின்றி பெறும் வகையில் வழிமுறைகள் வகுக்கப்படும். வக்பு வாரிய சொத் துக்கள் குறித்த தாவாக்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகை யில் உயர் நீதிமன்ற அனுமதியுடன் தீர்ப்பாயம் ஒன்று மதுரையில் அமைக்கப்படும் என்றும் தெரிவித் துள்ளார்.
இவ்வாறு சிறுபான்மை மக்க ளின் கோரிக்கைகளை பரிவுடன் பரி சீலித்து அவைகளை நிறைவேற் றும் வகையில் முடிவெடுத்து ஆக் கப்பூர்வமான முடிவுகளை அறி வித்துள்ள தமிழக முதல்வர் அவர் களுக்கும், தமிழக அரசுக்கும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.