india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள மாநிலத்தில் அரசு நிலத்தில் அனுமதி யின்றி கட்டப்பட்ட வழிபாட்டு தலங்களை  6 மாத காலத்துக்குள் அகற்ற கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்த மதத்தைச் சேர்ந்த வராக இருந்தாலும் அரசு நிலத்தில் சட்ட விரோ தமாக வழிபாட்டுத் தலம் அமைக்க அனுமதி யில்லை என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அசாம் – மேகாலயா எல்லையில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அசாம், திரிபுரா,  மிசோரம், மணிப்பூரை இணைக்கும் இணைப்பு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

புனே கார் விபத்தில் 2 ஐடி ஊழியர்கள் பலி யான விவகாரத்தில், காரை ஓட்டிய சிறு வனுக்கு ஜாமீன் வழங்கிய சிறார் நீதி வாரிய  உறுப்பினர்களை விசாரிக்க குழு அமைக்கப்பட் டுள்ளது.

மும்பை ஹோட்டல் அதிபரான ஜெயா  ஷெட்டி கொலை வழக்கில் நிழலுலக தாதாவான சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கேளிக்கை மற்றும்  பொழுதுபோக்கு நிறுவனமான ஹோல்டிங் நிறுவனமான இன்டர்நேஷனல் ரெக்ரியேஷன் அண்ட் அம்யூஸ்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் பண மோசடி குற்றச்சாட்டில், அந்நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.290 கோடி மதிப்புள்ள சொத்து களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, 421 முறை பிரித்தா ளும் பிரச்சனைகளை பேசியுள்ளதாக காங்கிரஸ்  தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ரயில் நிலை யத்தில் நடைமேடை நீட்டிப்பு மற்றும் விரி வாக்க பணிகளுக்காக வியாழனன்று நள்ளிரவு முதல் 63 மணிநேர மெகா பிளாக் நடைமுறைக்கு வருகிறது. இதன் காரணமாக 930 உள்ளூர் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

காவிரி ஐந்தாம் கட்ட திட்டத்தைச் செயல் படுத்த குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்  வாரியம் பெங்களூரு முழுவதும் ஜூன் 4 மற்றும்  ஜூன் 5 ஆகிய தேதிகளில் தண்ணீர் சப்ளை நிறுத் தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூஞ்ச்
ஜம்மு-காஷ்மீரில்கோர விபத்துபேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் பகுதியின் முக்கிய நெடுஞ்சாலையான ஜம்மு -  பூஞ்ச் நெடுஞ்சாலையில் உள்ளது. அக்னூர் பகுதியின் தாண்டா மோர் பள்ளத்தாக்கு. குறுகிய பாதை  அமைப்புடன் கொண்ட இந்த பள்ளத் தாக்கில் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ்  என்ற இடத்தில் இருந்து  வந்த பேருந்து வியாழனன்று  காலை திடீரென கவிழ்ந்தது. இந்த  கோர விபத்தில் 21 பயணிகள் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாய மடைந்த 10க்கும் மேற்பட் டோர் அக்னூர்  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் பலரது   நிலைமை கவலைக்கிடமாக இருப்ப தால், பலி எண்ணிக்கை உயரும் அபா யம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான கார ணம் குறித்து ஜம்மு&காஷ்மீர் நிர்வாகம்  இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு
பிரஜ்வால் ரேவண்ணா கைது கோரி மகளிர் அமைப்பினர் போராட்டம்

பாஜக கூட்டணி கட்சியான மதச்  சார்பற்ற ஜனதா தள தலைவ ரும், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனு மான பிரஜ்வால் ரேவண்ணா (33), 300 பெண்களை பாலி யல் பலாத்காரம் செய்த  விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 25 அன்று  3000க்கும் மேற்பட்ட  ஆபாச வீடியோக்கள் வெளியாயின. வீடியோ வெளியாயின. மோடி அரசின்  உதவியால் (எம்பிக்களுக்கான பாஸ்  போர்ட்) பிரஜ்வால் ஜெர்மனிக்கு தப்பிச்  சென்றார். இந்த விவகாரத்தை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி பிரிவு, சர்வதேச  போலீசார் உதவியுடன் தீவிரமாக இறங்கி யுள்ளதால், கடும் நெருக்கடியில் உள்ள பிரஜ்வால் ரேவண்ணா வெள்ளியன்று இரவுக்குள் பெங்களூரு திரும்ப உள்ள தாகவும், இதுதொடர்பான முன்பதிவு  பயணசீட்டும் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்த தகவலையடுத்து பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்  யும் முனைப்பில் பெங்களூரு கெம்பேக வுடா சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்  ளது கர்நாடகா எஸ்ஐடி கண்காணிப்பு மையம்.

இந்நிலையில், பிரஜ்வால் ரேவண் ணாவை கைது செய்யக் கோரி ஹாசன் தொகுதி முழுவதும் அனைத்து மகளிர் அமைப்பினரும் பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். ஒரு சில இடங்க ளில் பிரம்மாண்ட பேரணியுடன் போராட்  டம் நடைபெற்றது. பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்யும் வரை  போராட்டம் நீடிக்கும் என அனைத்து மக ளிர் அமைப்பினரும் அறிவித்துள்ளனர்.

பாட்னா
அதிகரிக்கும் வெப்ப அலைபீகார் பள்ளிகளுக்கு  10 நாட்கள் விடுமுறை

காலநிலை மாற்றத்தால் வட இந்தியாவில் வெயில் மிக  மோசமான அளவில் கொளுத்தி வருகிறது. ராஜஸ்தான், தில்லி, பீகார் ஆகிய மாநிலங்களில் அரே பிய பாலைவன வெப்பநிலைக்கு நிக ராக வெப்ப அலை வீசி வரும் நிலை யில் புதனன்று பீகாரின் ஷேக்பூராவில் வெப்ப அலையின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மாணவர்கள் பள்ளி வளா கத்திலேயே மயங்கி விழுந்தனர். இதைத்  தொடர்ந்து கடும் வெயில் சுட்டெரித்தும் ஏன் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வில்லை என பீகார் மாநில எதிர்கட்சித்  தலைவர் தேஜஸ்வி கேள்வி எழுப்பி  ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு கண்ட னம் தெரிவித்தார். இதனையடுத்து பீகார் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.