திங்கள் முதல் (ஆகஸ்ட் 12) செப்டம்பர் மாதம் இறுதிவரை திருப்பதி மலைப்பாதையில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. வன விலங்குகள் குட்டிகளை ஈனும் காலம் என்பதால் தேவஸ்தான நிர்வாகம் நேரக் கட்டுப்பாடு விதித்ததாக விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் ஆகஸ்ட் 21 அன்று நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர் பாக, ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லூரி முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உயர்கல்விக்காக 13.4 லட்சம் இந்திய மாண வர்கள் 108 நாடுகளில் படித்து வருகின்றனர் என வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தரவு ஒன்றை வெளியிட்டுள்ளன.
கைதிகள் விடுதலை தொடர்பான உத்த ரவை நிறைவேற்றாவிட்டால் உத்தரப் பிரதேச பாஜக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி பூஜா ஹெட்கர், முன்ஜாமீன் கோரி தில்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு வரும்வரை பூஜாவை கைது செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
நெடுஞ்சாலையில் வாகனம் நிறுத்த இடம் இல்லை என்பதால், தில்லி அருகே ஷம்பு எல்லையில் நடைபெற்று வரும் விவசாய போராட்டக் களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் டிராக்டர்களை அகற்ற விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்து மாறு பஞ்சாப் அரசிறகு உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
சட்டவிரோத சுரங்க வழக்கில் ஹரியானா காங் கிரஸ் எம்எல்ஏ மற்றும் முன்னாள் ஐஎன்எல்டி எம்எல்ஏ-வின் ரூ.122 கோடி மதிப்புள்ள சொத்துக் களை அமலாக்கத்துறை திங்களன்று முடக்கியது.
பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநி லத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத்தில் 53 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
கேரள வனப்பகுதியில் யானைகள் உயி ரிழப்பது குறித்து அம்மாநில வனத்துறை விளக்கம் அளிக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பா யம், ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கடன் தள்ளுபடி
வயநாடு
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட கடும் நிலச் சரிவில் சிக்கி 430 பேர் உயிரிழந்தனர். இன்னும் 120 பேரை காணவில்லை. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவா ரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி 13ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை வங்கிக் கிளை வாடிக்கையாளர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கேரள வங்கி அறிவித்துள்ளது.
புதுதில்லி
சிபிஐ-க்கு எதிராக கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் கடந்த ஜூலை 12 அன்று கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலை யில், சிபிஐ கைது நிலுவையில் இருப்ப தால் அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் உள்ளார்.
இந்நிலையில், சிபிஐ கைது செய்ததை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் தில்லி உயா்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு கடந்த வாரம் தள்ளு படி செய்யப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மேல் முறையீடு மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.