“நான் “இந்தியா” கூட்டணிக் குத் தலையேற்கத் தயார். நான் மேற்கு வங்கத்துக்கு வெளியே செல்ல விரும்பவில்லை. ஆனால் நான் மேற்கு வங்கத்தில் இருந்தே கூட்டணியை இயக்க முடியும்” என டிசம்பர் 8 அன்று செய்தி யாளர்கள் சந்திப்பின் போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். மம்தாவின் பேச்சிற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், புதிய தலைவர் மூலம் “இந்தியா” கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என மம்தா பானர்ஜி, சரத் பவாருக்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி மறைமுகமாக அறிவுரை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியை வழிநடத்துவ தில் எங்களுக்கு எந்தப் பிரச்சனை யும் இல்லை.
ஆனால் பாஜக எதிர்ப்புக் கூட்டணியில் பல மூத்த அரசியல்வாதி கள் உள்ளனர் என்பதை மனதில் கொண்டு, ஒன்றாக அமர்ந்து ஒரு தலை வரைத் தேர்ந்தெடுப்பதில் கூட்டு முடி வெடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இது மிகவும் அவசியமானது. எதிர் காலத் தலைமைப் பிரச்சனையில் நாங்கள் இன்னும் கூட்டாக எந்த அழை ப்பு ஏதும் விடுக்கவில்லை. அதனால் புதிய தலைவர் தேர்வு மூலம் கூட்ட ணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். ஆனால் யார் தலைவராக இருப்பார் என்பது குறித்து எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், அது ஒருமித்த கருத்துடன்தான் இருக்க வேண்டும்” என அவர் கூறினார்.