புதுதில்லி, மார்ச் 7- தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ள விவரங்களை, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ (SBI) வங்கி அளித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலை மைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
தேர்தல் பத்திரங்கள் அரசமைப்புச் சட்டத் திற்கு விரோதமானவை என்று அறிவித்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை உச்ச நீதி மன்றத்தில் மார்ச் 6-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்திட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி நிறைவேற்றத் தவறியிருக்கி றது.
இந்தத் தகவல்களை அளித்திட உச்ச நீதி மன்றம் தன் தீர்ப்பில் பாரத ஸ்டேட் வங்கிக்கு மூன்று வாரங்கள் கால அவகாசம் அளித்திருந்தது. அதன்படி மார்ச் 6 அன்று தகவல்களை அளிப்ப தற்குப் பதிலாக, ஜூன் 30 வாக்கில்- அதாவது மேலும் 116 நாட்கள் கழித்து- விவரங்களை சமர்ப் பித்திட கால அவகாசம் கோரி, ஸ்டேட் பாங்க் இந் தியா வங்கி நீதிமன்றத்தை அணுகி இருக்கிறது.
தேர்தல்கள் முடியும் வரை தேர்தல் பத்திரங் கள் தொடர்பான விவரங்களை மக்களுக்குத் தெரி விக்காமல் இருப்பதற்கான சூழ்ச்சியே இது என் பது தெளிவாகவே தெரிகிறது. டிஜிட்டல்மயமாகி யுள்ள ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை, ஒரு சில நாட்களுக்குள் தெரிவிக்க முடியாது என்று கூறுவது நம்ப முடியாததாகும்.
மோடி அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தின் காரண மாகவே ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ இத்தகு ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாட்டை எடுத்தி ருக்க வேண்டும். எனவே, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ வங்கி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவ ரங்களையும் சமர்ப்பித்திடுவதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திட வேண்டும்.
இதனை வலியுறுத்தி நாடுமுழுதும் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அனைத்துக் கிளைகளையும் அர சியல் தலைமைக்குழு அறைகூவி அழைக்கிறது.