புதுதில்லி, ஜூலை 14- விவசாயிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் கடன்கள் ரத்து உட்பட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்களைப் படிப்படியாகக் கட்டவிழ்த்துவிட சம்யுக்த கிசான் மோர்ச்சா அறைகூவல் விடுத்துள்ளது.
சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் பொ துக்குழு புதுதில்லியில் புதனன்று நடைபெற்றது. பொதுக்குழுவில் அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஹன்னன் முல்லா, கிருஷ்ணபிரசாத் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க கீழ்க்கண்டவாறு போராட்டங்களை மேற் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
‘கார்ப்பரேட்டுகளே! இந்தியாவைவிட்டு வெளியேறு’
“வெள்ளையனே வெளியேறு தினமான” ஆகஸ்ட் 9 அன்று, ‘கார்ப்பரேட்டுகளே! இந்தியா வைவிட்டு வெளியேறு’ தினமாக அனுசரித்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் நாடு முழுதும் கோரிக்கை சாசனத்தை முன் வைத்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
2024 ஆகஸ்ட் 17 அன்று பஞ்சாப், சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் பஞ்சாப்பில் பஞ்சாப் முதல்வர் மற்றும் அனைத்து அமைச்சர்கள் இல்லங்களின் முன்பு மூன்று மணி நேரம் கிளர்ச்சிப் போராட்டம் அனுசரிக்கப்படும். அப்போது பஞ்சாப்பில் கடுமையாக உள்ள தண்ணீர் நெருக்கடி, கடன் சுமைப் பிரச்ச னையை முன்வைத்தும், பஞ்சாப்பிற்கும் பாகிஸ் தானுக்கும் இடையே சாலை வழியே வர்த்தகப் போக்குவரத்தை மேற்கொள்ள வலியுறுத்தியும், ஒன்றிய அரசாங்கத்தின் பஞ்சாப்பிற்கு எதிரான கொள்கையை கண்டித் தும் போராட்டங்கள் நடைபெறும்.
கருத்தரங்குகள்
அதே நாளன்று இதர மாநிலங்களில் தண்ணீர், நிலம், வனம் மற்றும் கனிம வளங்கள் உட்பட அனைத்தையும் பாதித்திடும் அரசின் கொள்கைகளைக் கண்டித்து கருத்த ரங்கங்கள் நடைபெறும்.
விரைவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடை பெறவுள்ள ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்க ளில் விவசாயிகளின் கோரிக்கைகளை முன் வைத்து பாஜக-வின் விவசாய விரோதக் கொள்கைகளை தோலுரித்துக்காட்டும் விதத்தில் சுயேச்சையான இயக்கங்கள் மேற் கொள்ளப்படும். இதர தொழிற்சங்கங்களுடன் இணைந்து வாகன ஜாதாக்கள், பாத யாத்திரைகள் மற்றும் மகாபஞ்சாயத்துக்கள் மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் உடனடியாக சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் ஒருங்கி ணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, அந்தந்த மாநிலங்களின் விவசாயிகளின் முக்கியப் பிரச்சனைகள் அடையாளம் காணப்பட்டு, அதற்கேற்ற விதத்தில் போராட்ட வடிவங்கள் தீர்மானிக்கப்படும்.
மேலும், மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், மாணவர் சங்கங்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் இதர வெகுஜன அமைப்புகளுடன் கலந்துபேசி, எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என்று பொதுக்குழு முடி வெடுத்துள்ளது.
கோரிக்கை சாசனம்
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கை சாசனம் வருமாறு:
· அனைத்து விவசாயப் பொருள்களையும் உத்தரவாதத்துடன் கொள்முதல் செய்திட வேண்டும். அதற்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை உற்பத்திச் செலவினத்துடன் ஒன்றைய மடங்கு கூடுதலாக நிர்ணயம் செய்திட வேண்டும்.
· விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கடன்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.
· மின்சாரத் துறை தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது. ‘ப்ரிபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்திட்டம்’ ரத்து செய்யப்பட வேண்டும்.
· பொதுத்துறை நிறுவனங்களின்கீழ் பயிர்ப்பாதுகாப்பு இன்சூரன்ஸ் திட்டம் மற்றும் கால்நடை வளர்ப்பு இன்சூரன்ஸ் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
· விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் அளிக்கப்பட வேண்டும்.புல்டோசர் ராஜ்ஜியத்திற்கு முற்றுப்புள்ளி
· 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். நிலத்தை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். புல்டோசர் ராஜ்ஜியத்திற்கு
முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.
·விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்காதே. விவசாய உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்காதே.
· செயற்கை உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், மின்சாரம், நீர்ப்பாசனம், பெட்ரோலியப் பொருட்கள், எந்திரங்கள்மற்றும் டிராக்டர்கள் போன்ற விவசாய இடுபொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியைப் போடாதே.
· கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மாநிலங்களும் வரி விதிக்கும் விதத்தில் ஜிஎஸ்டி சட்டத்தைத் திருத்திடு.
· விவசாயத்திற்குத் தனி ஒன்றிய பட்ஜெட் அறிமுகப்படுத்து.
· ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் கூட்டுறவுத் துறையை ஒழித்துக்கட்டு. அரசமைப்புச் சட்டம் கூறியுள்ளதுபோல் கூட்டுறவுத் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்திட வேண்டும்.தியாகிகள் நினைவிடம்
· வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கு நிரந்தர தீர்வை உறுதி செய்திடு; உயிரிழப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குக, பயிர்கள் மற்றும்
கால்நடைகள் இழப்புக்கு உரிய இழப்பீடு வழங்குக.
· லக்கிம்பூர் கெரியின் தியாகிகள் உட்பட வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தின் தியாகிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குக.
· விவசாயிகள் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு. 736 விவசாயிகள் தியாகிகளின் நினைவாக சிங்கு/திக்ரி எல்லையில் பொருத்தமான தியாகிகள் நினைவிடம் கட்டப் படும்.
(ந.நி.)