புதுதில்லி, ஆக.1- பிரதமரின் தேசிய நிவாரண நிதித் திட்டம் (PMNRF-Prime Minister’s National Relief Fund) மேம்படுத்தப்பட வேண்டி யது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவ தாசன் கூறினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அவசரப் பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை களை எழுப்பும் நேரத்தில் மாநிலங்களவை யில் டாக்டர் வி.சிவதாசன் பேசியதாவது:
பிரதமரின் தேசிய நிவாரண நிதித் திட்டத்தின்கீழ் அளிக்கப்படும் மருத்துவ உதவி க்கான செயல்முறைகள் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இந்தத் திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்து வமனைகளின் (empanelled hospitals) எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் ஏழை நோயாளிகள் இதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கிறது.
இந்த உதவியைப் பெறுவதற்கான விருப்பமனு ஏற்கப்படுவதற்கு முன் ஒருவர் சிகிச்சைக்காக செலவிடும் தொகை அந் நோயாளிக்கு திரும்ப கொடுக்கப்படுவ தில்லை. இதன் விளைவாக, பலர் இந்தத் திட்டத்தில் தொகையைப் பெற்றால்கூட அதனைப் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழான உத விக்காக அளிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். அதிகபட்ச உதவிக்கான வரம்பு உயர்த்தப்பட வேண்டும். ஏழை நோயாளிகளால் இந்தத் திட்டத்திற் கான செயல்முறைகளை மிக எளிதாக நிரப்ப முடியாமல் திணறுகிறார்கள். அதனால் இது எளிதாக்கப்பட வேண்டும். எனவே, ஏழைகளிலும் ஏழைகளாக இருப்பவர்கள் பயன்படுத்தும் விதத்தில் இந்தத் திட்டத்தில் உடனடியாக மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.