india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கடந்த ஒரு வாரம் ஏப்ரல் 16-ஆம் தேதி மக்க ளவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடை பெறவுள்ளதாக வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊட கங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்த தக வல் போலியானது என்றும், தேர்தல் அட்டவணை யை செய்தியாளர்கள் சந்திப்பு மூலம் தேர்தல் ஆணையமே அறிவிக்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்வந்த் சிங் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நிலக்கரி சுரங்க மோசடி வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் தில்லி வீட்டில் ரூ.36 லட்சம் பணம், பிஎம்டபிள்யூ சொகுசு கார் மற்றும் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை  இல்லாமல் தகவல் வெளியிட்டுள்ளது.

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந் தியா (பிஎப்ஐ) அமைப்பைச் சேர்ந்த 3 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வார ணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில்  இந்து கோவிலை இடித்துக் கட்டியதற்கான ஆதா ரம் இருப்பதாக இந்திய தொல்லியல் ஆய்வகம் (ஏஎஸ்ஐ) அறிக்கை அளித்துள்ளது. இந்த ஆய்வ றிக்கையை முக்கிய எதிர்மனுதாரரான அகில  இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் (ஏஐஎம்பி எல்பி) நிராகரித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் முக்கிய கட்சியான “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சி போட்டியிடும் 62 தொகுதிகளில் முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் செவ்வாயன்று வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று காங்கிரஸுக்கு 11 தொகுதிகளும், ராஷ்ட்ரீய லோக் தளத்துக்கு 7 தொகுதிகளையும் சமாஜ்வாதி ஒதுக்கி யுள்ளது. அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ்  மீண்டும் மெயின்புரி தொகுதியில் போட்டியிட வுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பி டத்தக்கது. 60 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் விளை யாட செல்லும் இந்திய அணிக்கு அந்நாட்டு ஜனாதிபதிக்கு இணையான பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது பாகிஸ்தான் அரசு.