“கேரள அரசு ஊழியர்களுக்கு ஓணம் போனஸ் ரூ.4,000 வழங்கப்படும்” என அம்மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் வெள்ளியன்று அறிவித்தார்.
ஆந்திராவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் 35 பேர் இறந்ததாகவும், கனமழையால் 1 லட்சத்து 69 ஆயிரத்து 370 ஏக்கர் நிலத்தில் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 18,422 தோட்டக்கலை பயிர்கள் சேதமானதாகவும், 3,973 கிலோ மீட்டர் சாலைகள் சேதமாகியுள்ளதாகவும் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சுஜீத் குமார், மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மாநிலங்களவை செயலகம் அறிவித்துள்ளது.
சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு மீண்டும் கொண்டுவரப்படாது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சி, காஷ்மீரின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது என ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மர கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய தேடுதலில் 16 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக மகேஷ்குமார் கவுட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ரேவந்த் ரெட்டிக்கு பதில் மகேஷ்குமார் கவுட் நியமனம்செய்யப்பட்டார்.
நாட்டின் அமைதியை பாதுகாக்க முப்படை களும் தயாராக இருக்க வேண்டியது அவ சியம்” என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீரென கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
தில்லியின் சுல்தான்புரி பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் 11 வயது மாணவி தனது வகுப்பறையிலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிர்வாக மாற்றம் என்ற பெயரில் ராஜஸ்தான் அரசு 350 க்கும் மேற்பட்ட நிர்வாக சேவை (RAS) அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது.
கொல்கத்தா
ஆர்.ஜி கர் மருத்துவமனையின்
முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
மேற்கு வங்க மாநிலம் கொல் கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துவமனையில் கடந்த மாதம் முது நிலை மருத்துவ மாணவி வன்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்பு டையவராக கருதப்படும் மருத்துவம னையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் சிபிஐ காவலில் உள்ள நிலையில், நிதி முறைகேடுகள் தொடர்பாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நிதி முறைகேடுகள் தொடர்பாக சந்தீப் கோஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மூவரின் வீடுகளில் ஒரே நேரத்தில் வெள்ளியன்று அமலாக்கத்து றை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பெலியாகட்டாவில் உள்ள சந்தீப் கோஷின் இல்லத்திலும், ஹவுரா மற்றும் சுபாஷ்கிராமில் உள்ள இரண்டு இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
மும்பை
ஆம்புலன்ஸ் சேவை தரமறுப்பு
2 குழந்தைகளின் உடல்களை 15 கிமீ தோளிலேயே சுமந்து சென்ற பெற்றோர்
பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகா ராஷ்டிராவின் கட்சிரோலி அருகே உள்ளது அஹேரி கிராமம். இக்கிராமத்தில் வசித்து வந்த தம்பதியின் 3 மற்றும் 6 வயது குழந்தைகள் காய்ச்ச லால் பாதிக்கப்பட்ட நிலையில், போக்கு வரத்து வசதியின்றி நடந்தே ஜமில்கட்டா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தைகளை அவரது பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். ஜமில்கட்டா ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் அடுத்த 2 மணி நேரத்தில் 2 குழந்தை களும் உயிரிழந்தனர். மருத்துவமனை யில் இருந்து உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி கோரியும், ஆரம்ப சுகாதார நிலையம் ஆம்புலன்ஸ் உதவி அளிக்கவில்லை. இதனால் 2 குழந்தைகளின் உடல்களை தோளிலேயே சுமந்து 15 கிமீ நடந்தே அஹேரி கிராமத்தை அடைந்து குழந்தைகளை அடக்கம் செய்துள்ளனர் இளம் பெற்றோர்கள். 2 குழந்தைகளை இழந்த துக்கத்துடன் இளம் பெற்றோர்கள், குழந்தைகளின் உடல்களை 15 கிமீ தோளிலேயே சுமந்து சென்ற சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
லக்னோ
இறைச்சி உணவு கொண்டு வந்ததாக பள்ளி மாணவர் வெளியேற்றம்
பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தின் அமரோ ஹாவில் உள்ள தனியார் பள்ளியில் இறைச்சி உணவு கொண்டு வந்ததாக பள்ளி மாணவர் (12 வயதிற்குட்பட்ட சிறுவன்) வெளியேற்றப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வெளியேற்றப்பட்ட சிறுவன் நடந்தவற்றை தனது தாயிடம் கூற, சிறுவனின் தாய் பள்ளி முதல்வரிடம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்துள்ளார். ஆனால் பள்ளி முதல்வர் இறைச்சி உணவு கொண்டு வந்ததற்காக வெளியேற்றினோம் என கூறியுள்ளார். சிறுவனின் தாயோ,”நான் இறைச்சி சமைக்கவில்லை. அவன் அசைவ உணவு பள்ளிக்கு கொண்டு வரவில்லை” என கூறியுள்ளார். உடனே பள்ளி முதல்வர் சிறுவனின் தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை வீடியோவாக எடுத்த சிறு வனின் தாய் மாவட்ட கல்வி அலுவல கத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இந்த விவகாரத்தை விசாரிக்க மாவட்ட பள்ளி கண்காணிப்பா ளர் 3 பேர் கொண்ட குழுவை நியமித்த தாக தகவல் வெளியாகியுள்ளது. இறைச்சி உணவு கொண்டு வந்ததற்காக பள்ளி மாணவரை வகுப்பை விட்டு வெளி யேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.