“அக்னிவீரர்கள்” நாட்டைக் காக்கும் பணியில் உயிர் இழந்தாலும், வீர மரணம் அடைந்த இராணுவத்தினருக்கு வழங்கப்படும் எந்த மரியாதையும் வழங்கப்படவில்லை என புகார். உடல் அடக்கத்தில் கூட இராணுவம் சார்பில் யாரும் வருவதில்லை. சாதாரண ஆம்புலன்சில் உடல் வீட்டில் ஒப்படைக்கப்படுகிறது. ஒப்பந்தத் தொழிலாளிக்கு, இராணுவ வீரர் ஆனாலும் அவ்வளவு தான் என்கிறது மோடி அரசு!!” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் விமர்சித்துள்ளார்.