பதவி உயர்வு கோரியும், காலிப்பணியிடங் களை நிரப்பக்கோரியும் 100க்கும் மேற்பட்ட ஒன்றிய அரசு ஊழியர்கள் தில்லியில் ரசினா ஹில்ஸ் பகுதியில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி செவ்வாயன்று காலை பேரணியுடன் போராட்டம் நடத்தினர்.
ரசினாஹில்ஸ் பகுதி பிரதமர் அலுவலகம் மற் றும் உள்துறை, பாதுகாப்புத்துறை அமைச்சகங் கள் அமைந்துள்ள முக்கியப் பகுதி என்பதால் ஒன்றிய அரசு ஊழியர்கள் போராட்டத்தால் அங்கு பர பரப்பான சூழல் உருவானது.
ஒன்றிய அரசு ஊழியர்கள் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், செய்தியாளர்களின் சந் திப்பின் பொழுது கூறுகையில், ”பெரும்பாலான ஒன்றிய அரசு ஊழியர்கள் பதவி உயர்வு கிடைக்கா மலேயே ஓய்வு பெறுவதால் அவர்களுக்கு ஓய்வூ தியப் பலன்களில் இழப்பு ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய அரசுத் துறையில் ஏராள மான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் தற்போது பணிபுரியும் ஒன் றிய அரசு ஊழியர்கள் மிகுந்த பணிச்சுமை அழுத் தத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.
காலிப்பணியிடங்களை கண்டறிய கடந்த 2022இல் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு தங்களது பரிந்துரைகளை அரசிடம் இது வரை அளிக்கவில்லை. முக்கியமாக பதவி உயர்வு களை மேலும் தாமதப்படுத்தினால் அரசுக்கு எதி ராக ஒத்துழையாமை இயக்கம் உருவாகி பிரம் மாண்ட அளவில் போராட்டம் வெடிக்கும்” என பிரதமர் மோடிக்கு ஒன்றிய அரசு ஊழியர்கள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.