வரும் கல்வியாண்டில் 3 முதல் 6ம் வகுப்பு களுக்கு புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய பாட புத்தகங்கள் வெளியிடப்படும் என்றும், மற்ற வகுப்புகளுக்கு எந்த மாற்றமும் இல்லை என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இந்திய விமானப்படை முன்னாள் தலைவர் ஆர்.கே.எஸ்.பதவுரியா ஞாயிறன்று பாஜகவில் இணைந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லவபுரம் அருகே ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்கால உத்தி குறித்து விவாதிக்க ஆம் ஆத்மி கட்சியின் செயற்குழு ஞாயிறன்று கூடியது.
பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் பீகாரில் 16 மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில், அதற்கான வேட்பாளர் பட்டியலை ஞாயிறன்று வெளியிட்டது.
மக்களவை தேர்தல் செயல்பாட்டில் தனது தலையீடு இருக்காது என்று மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் இணைந் துள்ள மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு (ஜேடிஎஸ்) 3 சீட்கள் மேல் கிடையாது என பாஜக கூறியதால் ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி அதிர்ச்சி
அடைந்துள்ளார்.
பெங்களூரு ராமேஸ்வரம் கபே வெடிகுண்டு வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்கள் அப்துல் மத்தீன் தாஹா, முசாவிர் உசேன் ஷாசிப் ஆகிய இருவரும் குமரி எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில்தொடர்புடையவர்கள் என வட மாநில தனியார் செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு மறுப்பு தெரிவித் துள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் பாஜக உடனான கூட்டணியை ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) முறித்துள்ள நிலையில், மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, தில்லி ஆகிய மாநிலங்களில் மார்பக புற்றுநோயின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது.
பெங்களூரு
காலியானது
பாஜக கூடாரம்
நாடு முழுவதும் பாஜக மற்றும் மோடிக்கு எதிரான அலை தீவிரமடைந்துள்ளது. இதனை முன்கூட்டியே உணர்ந்த பாஜகவினர் தங்களுக்கு சீட் வேண்டாம் என கட்சியை விட்டு ஓட்டம் பிடித்து வருகின்றனர். சிலர் மத்திய அமைப்புகளின் நடவடிக்கைக்கு பயந்து அரசியலில் இருந்து ஓய்வு பெறு வதாக நழுவி வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் தெற்கு பெங்களூரு மக்களவை தொகுதி யில் பாஜகவின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக் கணக்கானோர் சனியன்று இரவு காங்கி ரஸ் கட்சியில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்களில் பெரும்பா லானோர் தேர்தல் பணிக்குழு உறுப்பினர் கள் என தகவல் வெளியாகியுள்ள நிலை யில், தேர்தல் நேரத்தில் ஒரு தொகுதியே காலிக் கூடாரமானது பாஜகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேஜஸ்வி சூர்யா கலக்கம்
வெறுப்பு பேச்சிற்கு பிரபலமான பாஜகவின் தேஜஸ்வி சூர்யா மீண்டும் தெற்கு பெங்களூரு தொகுதியில் போட்டி யிட உள்ளார். கடந்த முறையை போன்றே இம்முறையும் எம்பியாகி, அமைச்சர் பதவியை பெற்று விட வேண் டும் என தேஜஸ்வி சூர்யா கனவில் உள்ள நிலையில், அவரது சொந்த தொகு தியில் பாஜகவினர் கூண்டோடு காங்கி ரசில் இணைந்து இருப்பது அவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இம்பால்
“இந்தியா” கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம்
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி கடந்த ஜனவரி மாதம் பீகாரின் “மகா” மற்றும் “இந்தியா” கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக கூட்டணியில் சேர்ந்தது. இவரது பச்சோந்தி அரசியலால் சொந்த கட்சிக் குள்ளேயே கடும் அதிருப்தி நிலவி வரு வதாக தகவல் வெளியாகியுள்ள நிலை யில்,வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான மணிப்பூரில் ஐக்கிய ஜனதாதளம் தனியாக பிரிந்து சென்று, “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி கடந்த ஜனவரி மாதம் பீகாரின் “மகா” மற்றும் “இந்தியா” கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக கூட்டணியில் சேர்ந்தது. இவரது பச்சோந்தி அரசியலால் சொந்த கட்சிக் குள்ளேயே கடும் அதிருப்தி நிலவி வரு வதாக தகவல் வெளியாகியுள்ள நிலை யில்,வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான மணிப்பூரில் ஐக்கிய ஜனதாதளம் தனியாக பிரிந்து சென்று, “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.