யுடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் உள்ள டக்கங்களை உருவாக்குபவர்க ளை, ஓடிடி மற்றும் டிஜிட்டல் தளங்க ளுடன் இணைத்து ஒழுங்குப்படுத்தும் வகையில், ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா 2023-ஐ, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றிய அரசு முன்மொழிந்தது.
டிஜிட்டல் மீடியா தளங்களுக்கான “டிஜிபப்” மற்றும் “எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா” போன்ற ஊடக அமைப்புகள், டிஜிட்டல் மீடியா நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இந்த நட வடிக்கை குறித்து தங்களிடம் இதுவரை ஆலோசிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டின. மேலும் எதிர்க்கட்சிகள், “டிஜிட் டல் மீடியா மற்றும் சமூக வலைதளங்க ளின் குரலை நசுக்குவதற்கான முயற்சி இது” என மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையான விமர்சனங்க ளை முன்வைத்தன.
இந்நிலையில், ஆன்லைன் கிரியேட்டர்களை ஒழுங்குபடுத்துவ தற்கான ஒளிபரப்பு சேவைகள் மசோதா வுக்கான சமீபத்திய வரைவை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள் ளது. இதுதொடர்பாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,“வரைவு மசோ தா தொடர்பாக அமைச்சகம் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறது. விரிவான ஆலோசனைக்குப் பிறகு புதிய வரைவு வெளியிடப்படும்” என்று தெரி வித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த வாரம் நாடாளு மன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மோடி அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைத்து மோடி அரசு பின்வாங்கியது.