india

img

மேகதாது அணைக்கு அனுமதி கூடாது

புதுதில்லி, ஜூலை 25 - காவிரி தண்ணீர், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் க. துரைமுருகன், வியாழனன்று தில்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை சந்தித்துப் பேசினார்.

ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகமான ஷ்ரம்சக்தி பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ்நாடு நீர்வளத்துறை செயலர் மணிவாசகன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், பொதிகை தமிழ்நாடு இல்ல ஆணையர் ஆஷிஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் உடனான சந்திப்புக்கு பிறகு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 
அப்போது பேசிய அவர், “காவிரி நீர்ப்பங்கீடு, மேகதாது விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் சி.ஆர். பாட்டீலுடன் ஆலோசனை நடத்தினோம். உச்சநீதிமன்ற தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதாந்திர அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கு எந்த ஆண்டும் கர்நாடகா தண்ணீர் வழங்கியது கிடையாது. இதனைச் சுட்டிக்காட்டி காவிரியில் தடையின்றி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என்றும் கூறினோம். அதேபோல காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளோம்” என்று தெரிவித்தார்.