அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து சங்கங்களின் தலைவர்கள், பிப்ரவரி 14 புதனன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர். ஆ.செல்வம், மலர்விழி, பேரா.சோ.சுரேஷ் உள்ளிட்ட ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.