அசாம் மாநிலத்தை போன்று இமாச்சலப்பிர தேத்திலும் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தலைநகர் சிம்லா உள்ளிட்ட மாநி லத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற் பட்டுள்ளது.
ஜூலை முதல் வாரம் முழுவதும் தில்லியின் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக, காற்று தரக் குறியீடு ஆணையம் (ஏகியூஐ) தகவல் தெரிவித்துள் ளது. தற்போது தில்லி பகுதியின் காற்றின் தரம் 60க்குள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் கட்டி டம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகிய நிலையில், 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ள னர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிவ சேனா (ஷிண்டே) தலைவர் ராஜேஷ் ஷாவுக்கு சொந்தமான பிஎம்டபிள்யு கார் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் மீது மோதியது. இந்த சம்பவத்தில் பெண், கார் பானட்டில் சிக்கி 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் டெங்கு காயச்சலால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்ததாக கூறப்படும் நிலையில், டெங்கு காயச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
பாக்கெட்டுகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ளிட்டவைகளின் அளவுகளை கட்டாயம் பெரிய அளவிலான எழுத்துக்களில் அச்சிட வேண்டும் என இந்திய உணவு தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2ஆவது விமான நிலையத்தை அமைப்பதற்கான இடத்தை முடிவு செய்ய விரைவில் கூட்டம் நடத்தப் படும் என அம்மாநில அமைச்சர் எம்.பி. பாட்டீல் தக வல் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர் பிரச்னை குறித்து கலந்துரை யாட தில்லிக்கு வருமாறு இந்திய வெளியுற வுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் ஹரியானா சட்டமன்ற தேர்த லில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் மாநிலத் தலைவர் ராம்பால் மஜ்ரா கூறியுள்ளார்.
சூரத்
குஜராத் அடுக்குமாடி கட்டிட விபத்து
பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஜவுளித்துறையில் வேலை செய் யும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பலர் தங்கி இருந்த 6 தளங்கள் கொண்ட அடுக்கு மாடி கட்டிடம் சனியன்று பிற்பகல் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகி யுள்ளதாகவும் 10-க்கும் அதிகமானவர் கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வரு வதாகவும் சூரத் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
7 ஆண்டுகள் கூட தாக்குபிடிக்காத கட்டிடம்
இடிந்து விழுந்த அடுக்குமாடி குடி யிருப்பு கட்டிடம் கடந்த 2016-17இல் கட்டப்பட்டது. அருகில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் கட்டிடத்தின் 5 மாடி களில் குடியிருந்த நிலையில், வெறும் 7 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்க முடியா மல் இடிந்து விழுந்தது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.
ரஜோரி
ஜம்மு- காஷ்மீரில் பதற்றம்
30 மணிநேரத்தில் 5 பயங்கரவாதிகள், 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சனியன்று இந்திய ராணுவ வீரர்களுக்கும் - பயங்கர வாதிகளுக்கும் இடையே துப்பாக்கி மோதல் நடைபெற்றது. இந்த துப்பாக்கி மோதலில் 4 பயங்கரவாதிகள் கொல் லப்பட்ட நிலையில், ராணுவம் தரப்பில் 2 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரி விக்கப்பட்டது. தொடர்ந்து ஞாயிறன்று அதிகாலை 4 மணியளவில் குல்காம் மாவட்டத்தின் மஞ்சாகோட் பகுதியில் உள்ள கலுதி கிராமத்தில் ராணுவ வீரர் களின் முகாம்களின் மீது பயங்கரவாதி கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவ வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், சுமார் அரைமணி நேரம் துப் பாக்கி மோதல் நடைபெற்றது.
இந்த துப்பாக்கி மோதலில் பயங்கர வாதி ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்த னர். குல்காம் மாவட்டத்தில் கடந்த 30 மணிநேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், 4 வீரர்கள் உயிரிழந்துள்ளதால் ஜம்மு- காஷ்மீரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஐஸ்வால்
வங்கதேச அகதிகளை திருப்பி அனுப்ப முடியாது
மிசோரம் முதல்வர் திட்டவட்டம்
வங்கதேசத்தில் கிளர்ச்சியா ளர்களின் குழுவான குக்கி - ஸின் தேசிய ராணுவத்தின் (கேஎன்ஏ) மீது, வங்கதேச ராணுவம் நடத்திய தாக்கு தலால் கடந்த நவம்பர் 2022 முதல் 2,000க்கும் மேற்பட்ட “ஸோ” இன மக்கள் மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்துள்ள னர். அதே போல மிசோ இனத்தில் ஒன் றான “பாம்” பழங்குடியின மக்கள் மிசோ ரமில் தஞ்சமடைந்து வருகின்றனர். “ஸோ” மற்றும் “பாம்” இன மக்களை மீண்டும் வங்கதேசத்திற்கு நாடு கடத்த மோடி அரசு தீவிரமாக முயற்சித்து வரு கிறது. இதுபற்றி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா எல்லை பாது காப்பு என்ற பெயரில் அடிக்கடி மிசோரம் அரசிற்கு நெருக்கடி அளித்து வந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 6 அன்று மிசோ ரம் முதல்வர் லால்துஹோமா, பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தி னார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் வெளி யிட்ட அறிக்கையில்,”வங்கதேச அகதி களுடன், மிசோரம் மக்கள் இனரீதியான பிணைப்பில் உள்ளனர். அதனால் இந் தியா மற்றும் வங்கதேச எல்லையிலுள்ள சிட்டகாங் மலைப்பகுதிகளில் தஞ்சம டைந்துள்ள “ஸோ” மற்றும் மிசோ இனத்தின் ஒன்றான “பாம்” பழங்குடியின மக்களை என்னுடைய அரசு அவர்களது நாட்டுக்குள் திருப்பித் தள்ளவோ, நாடு கடத்தவோ முடியாது. அதற்கான வாய்ப் பும் கிடையாது” என திட்டவட்டமாக தெரி வித்துள்ளார்.