ரெமல் புயலால் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 4 நாள்களாக ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளம், கனமழையால் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தில்லியில் இருந்து ஸ்ரீநகர் விமான நிலை யத்திற்கு வந்த விஸ்தாரா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடி குண்டு மிரட்டலை அடுத்து சோதனைக்குப் பின் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப் பட்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததை அடுத்து விமான சேவை வழக்கம்போல் தொடர்ந்தது.
உத்தரகண்ட் மாநிலம் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை தப்ரானி பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள் ளன. பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட நிலச்சரி வில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடு பட்டுள்ளனர்.
“முகலாய மன்னர் ஔரங்கசீப் வழியை பின் பற்ற விரும்புவோர் மீது புல்டோசர் நட வடிக்கை பாயும்” என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முஸ்லிம் மக்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
தில்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவுக்குப் (அமெரிக்கா) புறப்பட்ட விமானம் 20 மணி நேரம் தாமதமானதால் விமான நிலையத்தில் பய ணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். குளிர்சாதன வசதியில்லாததால் தில்லி விமான நிலையத்தில் பலர் மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“அரசியலையும், மதத்தையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது. அது இரண்டுமே தனித்து தான் இருக்க வேண்டும். ஒரு மதத்தை சேர்ந்தவர் உங்கள் பக்கம் இருக்கலாம். மற்றொரு மதத்தை சேர்ந்தவர் உங்களுக்கு எதிராக இருக்கலாம். அதனால் மதம் சார்ந்த உணர்வுகளையும் தேர்தலையும் இணைப்பது என்பது தவறானது. மோடி கன்னியாகுமரி சென்று நாடகம் போடுகிறார். அவ்வளவு காவலர்கள் பணியில் உள்ளதால் நாட்டின் பணம் தான் வீணாகி றது. இதனால் நாட்டுக்கு தான் தீங்கு. உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலேயே தியானம் செய்யலாம்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
புதுதில்லி
ஜூன் 2இல்
சரணடைகிறார் கெஜ்ரிவால்
மதுபானக் கொள்கை வழக்கில் தொடர்புடையதாக கூறி தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கி ணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரி வால் கடந்த மார்ச் 21 அன்று அமலாக்கத் துறை மூலம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப் பட்டார். 50 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு கெஜ்ரிவால் மே 10 அன்று இடைக்கால ஜாமீன் பெற்று மக்களவை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலை யில், இடைக்கால ஜாமீன் சனிக்கிழமை யுடன் (ஜூன் 1) நிறைவு பெறுகிறது. ஜூன் 2 அன்று கெஜ்ரிவால் மீண்டும் திகார் சிறை யில் சரணடைய வேண்டும் என்ற நிலை யில், மருத்துவ மற்றும் உடல்நலக் கார ணங்களுக்காக மேலும் 7 நாட்களுக்கு இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதும் உடனடி உத்தரவு பிறப்பிக்கவில்லை.
இதனால் ஜூன் 2 அன்று சரணடை வேன் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளியன்று அறிவித்துள் ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகை யில்,“ஜூன் 2 அன்று பிற்பகல் 3 மணிக்கு சரணடைய தனது வீட்டை விட்டு வெளி யேறுவேன். சிறைக்கு சென்ற பின் என்னை மேலும் சித்ரவதை செய்யலாம். ஆனால் நான் தலைவணங்க மாட்டேன். நான் எங்கு வாழ்ந்தாலும், உள்ளேயோ அல்லது வெளியேயோ நான் நானாகவே இருப்பேன்” என்று அவர் கூறினார்.
பாட்னா
முங்கர் தொகுதி மனுவை
விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பீகார் மாநிலம் முங்கர் மக்களவைத் தொகுதியில், வாக்குப்பதிவின் பொழுது பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்குச்சாவடி மையங்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு, முங்கர் தொகுதி “இந்தியா” கூட்டணி வேட்பாளரான ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் அனிதா தேவி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு வெள்ளியன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு மறுப்பு தெரிவித்தது.
புதுதில்லி
கடும் குடிநீர்த் தட்டுப்பாடு
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தில்லி அரசு
“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சியை ஒடுக்கும் முனைப்பிலும், ஆம் ஆத்மி ஆளும் தில்லி அரசை கவிழ்க்கும் முனைப்பிலும் மோடி அரசு பல்வேறு சித்து விளையாட்டுகளை தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகிறது. துணைநிலை ஆளுநர் மூலம் தொல்லை அளித்தும், தில்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவர்களை சிறையில் அடைத்தும் தில்லி அரசுக்கு எதிராக பல்வேறு நெருக்கடி அளித்து வந்த மோடி அரசு, தற்போது தில்லி மக்கள் மீதும் தாக்கு தலை தொடங்கியுள்ளது.
பாஜக ஆளும் ஹரியானா அரசுக்கு மறைமுகமாக உத்தரவிட்டு, யமுனை நதியிலிருந்து தில்லிக்கு வரும் குடிநீரை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது மோடி அரசு. இதனால் தில்லியில் தண்ணீர்ப் பஞ்சம் தீவிரமாகியுள்ள நிலையில், மோடி அரசின் இந்த இழிவான செயலுக்கு எதிராக தில்லி அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தில்லி அரசு தாக்கல் செய்த மனுவில்,”அரசியல் பாகுபாடுகளை புறந்தள்ளிவிட்டு அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதே சத்தில் இருந்து கூடுதலாக நீர் திறக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறப் பட்டுள்ளது.