புதுதில்லி, மே 21 - ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி-யின் உடலுக்கு அந்நாட்டு தலைநகரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து, அவரது உடல் ஈரானின் வடகிழக்கு பகுதியில் உள்ள அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மஷாத்துக்கு (ரைசி பிறந்து வளர்ந்த ஊர்) எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அஞ்சலிக்குப் பின், வியாழன் அன்று இறுதி நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.