சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையில் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் வேறுபாடு இல்லை பிடிபி தலைவர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையில் இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே எந்த வேறுபாடும் கிடையாது என ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவரு மான மெகபூபா முப்தி குற்றம் சாட்டி யுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகை யில்,”இந்தியாவில் மசூதி கணக்கெடுப்பு தொடர்பான வன்முறை சர்ச்சைக்கும், வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையின ருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்க ளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. சிறுபான்மையினருக்கு எதி ரான வன்முறையில் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே எனக்கு எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரிய வில்லை. ஜம்மு-காஷ்மீரை மீண்டும் 1947ஆம் ஆண்டு நிலைமைக்கு அழை த்துச் செல்வது போன்று உள்ளது.
இது எனக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை; ஜம்மு-காஷ்மீ ரில் நல்ல மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இல்லை. சாலை களின் நிலை மேம்படவில்லை. ஆனால் மசூதிகளை இடித்து வன்முறையை ஏற்படுத்த மட்டுமே முயற்சிக்கிறார்கள்” என அவர் கூறினார்.
மெகபூபாவிற்கு பாஜக மிரட்டல்
மெகபூபாவின் கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துக்கு எதிராக மெகபூபா மீது வழக்குப்பதிவு செய்யு மாறு ஆளுநருக்கு பாஜக அழுத்தம் கொடுத்து மிரட்டல் வேலையை தொ டங்கியுள்ளது.