ராஜஸ்தான் கிழக்குப் பகுதியில் அடுத்த 4-5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், பாரத்பூர், ஜெய்ப்பூர், கோட்டா, அஜ்மீர் மற்றும் உதய் பூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் அதீத அளவில் கனமழை கொட்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் நாராயண கூடாவில் இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியை ஹோட் டல் அறையில் 20 நாட்களாக அடைத்து வைத்து பாலி யல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் பள்ளி வாட்ஸ்அப் குழுவில் விநாயகர் சதுர்த்தி பதிவை நீக்கிய இஸ்லாமிய தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொச்சி
கேரளத்துக்கு யானைகளை கொண்டு வர தடை
கேரள உயர்நீதிமன்றத்தில் யானைகளை இடம் மாற்று வதை எதிர்த்து திருச்சூரை சேர்ந்த “வாக்கிங் ஐ ஃபவுண்டேஷன் ஆஃப் அனிமல் அட்வகேசி” என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுநீதிபதி ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார், நீதிபதி பி.கோபி நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்கு பின் நீதி பதிகள், “பிற மாநிலங்களில் இருந்து கேரளத்துக்கு யானைகளை கொண்டு செல்ல தற்காலிகமாக தடை விதித்தது. யானைகளை இடமாற்றம் செய்வதற்கு மாநில அரசோ அல்லது தலைமை வனப் பாதுகாவலரோ அனுமதி வழங்கக் கூடாது. என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறினார்.