மரியாதையும் நெறியும் நேர்மையும் இல்லாதவர்க ளால் ராமர் பெயரில் கோயில் கட்டப்படுகிறது என சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலிகூறினார். கண்ணூரில் ஊடகவியலாளர் கே.கே.ஷாஹினாவுக்கு குஞ்ஞிராமன் நாயனார் நினைவு விருதை வழங்கிப் பேசுகையில் அவர் மேலும் கூறியதாவது:
பில்கிஸ் பானுவை பாலியல் வல்லுறவு செய்து, அவரது மூன்று வயது மகள் உட்பட 13 குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற குற்றவாளிகளை சிறையில் இருந்து விடுவித்த வர்களால் குஜராத்தும் இந்தியாவும் ஆளப்படுகின்றன. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, பிரதமர் ராமர் கோவிலை பிரதிஷ்டை செய்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு குற்ற வாளிகள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இப்படிப்பட்ட கொடூர குற்றவாளிகள் சிறையில் இருந்து விடுதலையான போது ஆர்எஸ்எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பி னர் மாலை அணிவித்து வரவேற்றனர். அவர்கள் மிகவும் பண் பட்ட பிராமணர்கள் என்பது அவர்கள் முன்வைத்த நியாயம்.
இந்த கொடூரம் நடந்த உடனேயே, அவரை (பில்கிஸ்பானு) கோத்ராவில் உள்ள முகாமுக்குச் சென்று மாதர் சங்கத் தலை வர்களான நாங்கள் பார்த்தோம். துக்கத்தை அடக்கிக் கொண்டு, நான் போராடுவேன் என்று அவர் தெரிவித்தார். 22 ஆண்டுகளாக போராட்டம் தொடர்ந்தது. அப்போது நரேந்திர மோடியின் கட்சியினர் குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்றி வந்தனர். அவர்கள் உண்மையைக் கண்டு அஞ்சுகிறார்கள். எனவே உண்மையை வெளிக்கொண்டு வரும் பத்திரிகை யாளர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். ஷாஹினா போன்ற பத்திரிகையாளர்கள் யுஏபிஏ வழக்கில் சிக்கினாலும் அச்சமின்றி போராடுகிறார்கள். இவ்வாறான போராளிகள் இருக்கும் வரை நாம் விரக்தியடையக் கூடாது.