புதுதில்லி, ஜூலை 4 - மணிப்பூர் மாநில அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருப்பது, பாஜகவுக்கு விழுந்த அடியாக அமைந்துள்ளது. விசாரணை சிறைவாசி ஒருவர், குக்கி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்ப தால், அவரை மாநில அரசு மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லா மல் பாரபட்சம் காட்டியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்த கருத்தை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் அரசியல் ஆதாயத்திற் காக, குக்கி பழங்குடியினருக்கு எதிராக மெய்டெய் பிரிவினரை ஆளும் பாஜக அரசு தூண்டி விட்டது. இதனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அங்கே வன் முறை வெடித்து, நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிர் பறிக்கப்பட்டது. பெண்கள் மிக மோச மான முறையில் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். வீடுகள், கடைகள், வாகனங்கள், வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இப்போது வரை அங்கு சுமூக நிலை ஏற்படவில்லை. ஆளும் பாஜக அரசு, வெளிப்படை யாகவே குக்கி பழங்குடியினருக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், விசாரணை சிறை வாசியாக இருக்கும் குக்கி சமூகத்தை சேர்ந்தவர், பல நாட்களாக தீவிரமான மூல, காசநோய்- தீவிரமான முதுகுவலி இருப்பது குறித்து சிறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். 2023 நவம்பர் 22 அன்று, ஒரு மருத்துவ அதிகாரி அந்த நபரை பரிசோதித்த பிறகு கீழ் முதுகுத்தண்டில் பிரச்சனை இருப்பதைக் கண்டறிந்து எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்துள்ளார். இருந்தும் அவருக்கான மருத்துவ பரிசோதனையை ஆளும் பாஜக அரசு மறுத்துள்ளது.
இதனால், பாதிக்கப்பட்ட அந்த சிறை வாசி, தனக்கு ஜாமீன் கேட்டு மணிப்பூர் உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், உயர்நீதிமன்றமும், மாநில அரசு கூறியதை ஏற்றுக்கொண்டு, “குக்கி சிறைவாசியை மருத்துவமனைக்கு மாற்றுவது ஆபத்தானது; சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கும்” என்று கூறி, ஜாமீன் மறுத்து விட்டது. இதையடுத்து இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் சென்ற பின்னணியில் தான், மணிப்பூர் அரசின் செயலை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் ஜாமீன் மனு மீதான உத்தரவை மேற்கோள் காட்டிப் பேசிய உச்ச நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு, பாதிக்கப்பட்ட அந்த நபர் “குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர் என்ப தால் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை என்பது வேதனையானது” என்று கூறியுள்ளது.
“இப்போது உடனடியாக அந்த நபருக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்; மருத்துவ அறிக்கை தீவிரமான பிரச்சனைகள் இருப்பதை வெளிப்படுத்தினால், நாங்கள் உங்கள் (மணிப்பூர் அரசு) மீது நடவடிக்கை எடுப்போம்” என்றும் எச்சரித்துள்ளது.
“சிறைக் கண்காணிப்பாளர் அந்த நபரை, கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வ தற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அங்கு மூல நோய், காசநோய், அடிநா அழற்சி, வயிற்று வலி மற்றும் கீழ் இடுப்பு முதுகுத்தண்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து மருத்து வப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.மேலும், இந்த விவகாரத்தில், “மணிப்பூர் அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தின் அணு குமுறையை தொடர்ந்து கண்காணி க்கலாம் என்றாலும், தாங்கள் அவ்வாறு செய்ய விரும்பவில்லை” என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.