india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மேற்குவங்கத்தில் பிரச்சாரத்தை துவங்கியது சிபிஐ(எம்)
42 மக்களவை தொகுதிகளை மேற்குவங்க மாநிலத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டி யலை வியாழனன்று வெளியிட்டது. இந்  நிலையில் டம் டம் தொகுதி வேட்பாள ராக அறிவிக்கப்பட்டுள்ள சுஜன் சக்ர வர்த்தி மற்றும் ஜல்பைகுரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேப்ராஜ் பர்மன் ஆகியோர் வெள்ளி யன்று முதல் மக்களவை தேர்தல் பிரச்சா ரத்தை துவங்கினர்.

26 சட்டப்பேரவைத்  தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

மக்களவைத் தேர்தலோடு சேர்த்து, பீகார் (1), குஜராத் (5), ஹரியானா (1),  ஜார்க்கண்ட் (1), மகாராஷ்டிரா (1), திரிபுரா  (1), உத்தரப் பிரதேசம் (4), மேற்கு வங்கம்  (2), தெலுங்கானா (1), இமாச்சல பிரதேசம்  (6), ராஜஸ்தான் (1), கர்நாடகா (1), தமிழ்நாடு (1) என 13 மாநிலங்களில் மொத்தம் 26 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கும், இடைத் தேர்தல் நடை பெறுகிறது. தமிழகத்தில் விஜயதாரணி ராஜினாமாவால் காலியான விள வங்கோடு தொகுதிக்கு ஏப்ரல் 19 அன்று  வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தில்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்  பாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வாலுக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், அமலாக்கத்துறை சம்மன் சட்டவிரோதம் என கெஜ்ரிவால் 9 சம்மன் களையும் புறக்கணித்தார். இந்நிலையில், கெஜ்ரி வால் ஆஜராக உத்தரவிடக்கோரி அமலாக்கத் துறை தில்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. முன்னதாக இந்த வழக்கில் ஜாமீன் கோரி அரவிந்த்  கெஜ்ரிவால் தரப்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டி ருந்த நிலையில், இந்த வழக்கு சனியன்று விசா ரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் 15 ஆயி ரம் பிணைத்தொகை மற்றும் 1 லட்சத்திற்கான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை யுடன் கெஜ்ரிவாலுக்கு தில்லி ரோஸ்அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.

கலால் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர்  கே.கவிதாவை 7 நாட்கள் (மார்ச் 23 வரை) அமலாக்கத்துறை காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய விளக்கம் அளித்துள்ளார்.

பிஆர்எஸ் கட்சியின் கரீம்நகர் தொகுதி மக்க ளவைத் தொகுதியில் போட்டியிடும் பி. வினோத் குமாருக்கு சொந்தமான உணவகத்தில் ரூ.6.67 கோடி பணத்தை போலீசார் கைப்பற்றி னர்.

தில்லியில் நடைபெற்ற 71-ஆவது உலக அழகிப்  போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சினி ஷெட்டியை நடுவர்கள் வேண்டுமென்றே தோற்க டித்துள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

பணியில் சுணக்கம் காட்டிய மற்றும் திற மையை வளர்த்துக்கொள்ளாத 180 ஊழி யர்களை ஏர் இந்தியா நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.

மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, வீட்டில் தவறி தான் விழுந்தார் என்றும்,  யாரும் அவரை பின்னால் இருந்து தள்ளிவிட வில்லை என்றும் அக்கட்சி விளக்கம் அளித் துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 21 ஆயிரம் கிலோ கஞ்சா சாக்லேட்கள் பறி முதல் செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விஜயவாடா
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது 
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

வரவிருக்கும் மக்களவை தேர்தலு டன் ஆந்திர மாநில சட்ட மன்றத்துக்கும் தேர்தல் நடை பெறவுள்ளது. இந்த 2 தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கி ரஸ் தனித்து போட்டியிடுகிறது. காங்கி ரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - இந்திய  கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணியும், தேசிய ஜன நாயக கூட்டணியில் பாஜக - தெலுங்கு தேசம் - ஜனசேனா ஆகிய கட்சிகள் கள மிறங்குகின்றன.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகள், 25 மக்க ளவைத் தொகுதிகளுக்கான அனைத்து  வேட்பாளர் பட்டியலை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சனியன்று வெளி யிட்டது. புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன்  மீண்டும் போட்டியிடுகிறார். சட்டமன்றத்  தேர்தலில் போட்டியிடும் 175 வேட்பாளர் களில், 131 பேர் பட்டதாரிகள் ஆவர்.

ஹைதராபாத்
தெலுங்கானாவில் பிஎஸ்பி கட்சி உடைந்தது

வரவிருக்கும் மக்களவை தேர்த லில், தெலுங்கானா மாநி லத்தில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக வும், ஹைதராபாத் மற்றும் நாகர்கர்னூல்  தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி  (பிஎஸ்பி) போட்டியிடும் என அக்கட்சி தலைவர் மாயாவதி இரண்டு நாட்களுக்கு  முன் அறிவிப்பை வெளியிட்டார். 

இந்நிலையில், மாயாவதியின், பிஆர்எஸ் - பிஎஸ்பி கூட்டணி அறி விப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தெலுங்கானா மாநில  தலைவர் டாக்டர் ஆர்.எஸ்.பிரவீன் குமார்  சனியன்று கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் ஆர்.எஸ்.பிர வீன்குமார்,”என்னை மன்னியுங்கள், எனக்கு வேறு வழி தெரியவில்லை. கடு மையான இதயத்துடன் நான் பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேற முடிவு  செய்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

“இந்தியா” கூட்டணியில் சேர பகுஜன்  சமாஜ் கட்சியின் முக்கிய மற்றும் மூத்த  தலைவர்கள் தொடர் அழுத்தம் கொடுத்  தாலும் அதை மாயாவதி கண்டுகொள்வ தில்லை. ஏற்கெனவே உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் பலர்  காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சியில் இணைந்த நிலையில், தற்போது தெலுங்கானாவிலும் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டாக உடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.