ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் மாணவி பாலியல் பலாத்கா ரம் செய்து கொலை செய்யப் பட்ட சம்பவம் தொடர் பாக திரிணாமுல் காங் கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. திரிணா முல் காங்கிரஸ் கட்சியின் சுகேந்து சேகர் ரே,”மருத் துவ மாணவிக்கு ஆதர வான போராட்டக்காரர்களுடன் நானும் இணையப்போகிறேன்” என செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகையில், “சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நாம் எழுந்து நிற்க வேண்டும். லட்சக்கணக்கான வங்காள குடும்பங்களைப் போல எனக்கும் ஒரு மகள் மற்றும் சிறிய பேத்தி உள்ளனர். அதனால் வியாழனன்று முதல் மருத்துவ மாணவிக்கு ஆதரவான போராட்டக் காரர்களுடன் நானும் இணையப் போகி றேன். பெண்களுக்கு எதிரான கொடுமை கள் இதோடு போதும். எது வந்தாலும் வரட்டும். ஒன்றாக இதனை எதிர்ப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.