india

img

தோழர் நிரபதா சர்தார் கைது : சிபிஐ(எம்) மத்தியக்குழு கண்டனம்

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலி கிராமத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான திரிணாமுல் காங்கிரஸ்  தலைவர் ஷேக் ஷாஜஹான், அவரது நெருங்கிய உதவியாளர் சிவபிரசாத் ஹஸ்ரா மற்றும் உத்தம் சர்தார் ஆகியோரைக் கைது செய்யக் கோரி வியாழனன்று பெண்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறை பெண்களுடன் போராட்டக் களத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும், விவசாய தொழிலாளர்களின் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான நிரபதா சர்தார் உள்ளிட்ட சிபிஐ(எம்) தோழர்களை கைது செய்துள்ளது. இதற்கு சிபிஐ(எம்) மத்தியக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.