மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக் குழு செயலாளராக இருந்த மறைந்த தோழர் கே.எம். திவாரிக்கு, டிசம்பர் 10 (செவ்வாய்) அன்று காசியா பாத் மாவட்டக் குழு அலுவலகத்திலும், புதன்கிழமை புதுதில்லியில் உள்ள மாநி லக் குழு அலுவலகத்திலும் நூற்றுக்க ணக்கான தோழர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்கள் பிருந்தா காரத், தபன் சென், அசோக் தாவ்லே, அகில இந்திய பார் வர்ட் பிளாக்கைச் சேர்ந்த தேவராஜன், இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். கட்சி யின் கேரள மாநிலக் குழுவிற்காக கே. ராதாகிருஷ்ணன், எம்.பி., அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்திற்காக வி.சிவதாசன், எம்.பி., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க தேசியத் தலைவர்கள், வந்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் தோழர் திவாரியின் உடல் எரி யூட்டுவதற்காக நிகாம் போத் சுடுகாட்டு க்கு எடுத்துச் செல்லப்பட்டது. (ந.நி.)