இந்தியாவை ஒட்டியுள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சீனா உள்கட்டமைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக இந்திய விமானப் படை தளபதி அமர் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப் படை தினம், வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு வெள்ளியன்று நடைபெற்றது. அப்போது, எல்ஓசி எனப்படும் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சீனா தனது உள்கட்டமைப்பை தீவிரமாக அதிகரித்து வருவதாகவும், அதற்கு இணையாக, எல்லையில் இந்தியாவும் தனது உள்கட்டமைப்பை வேகமாக மேம் படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
உலக நாடுகளிடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் எந்த வொரு எதிர்கால பாதுகாப்பு சவால்க ளையும் சமாளிக்க உள்நாட்டு ஆயுத அமைப்பு முறையை ஒரு நாடு கொண்டி ருப்பது அவசியம் என்றும், அந்த வகையில், இந்திய விமானப் படையில் 2047 ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை மட்டுமே பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு; அதனை நோக்கி மிக வேகமாக முன்னேறி வருகி றோம் எனவும் தெரிவித்தார் ஏ.பி. சிங். எஸ்-400 ஏவுகணை அமைப்பின் மூன்று யூனிட்டுகளை ரஷ்யா இதுவரை டெலி வரி செய்துள்ளது என்றும், எஞ்சிய இரண்டு யூனிட்டுகளை அடுத்த ஆண்டில் டெலிவரிசெய்ய ரஷ்யா உறுதி அளித்துள் ளது என்றும் அவர் தெரிவித்தார்.