புதுதில்லி
7 மாநிலங்களின் 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்
உயிரிழப்பு, ராஜினாமா, கட்சி தாவல் உள்ளிட்ட சம்பவங்களால் தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி, மத்தியப்பிரதேசத்தில் அமர்வாரா, பீகா ரில் ரூபாலி, உத்தரகண்டில் உள்ள பத்ரி நாத், மங்களூர், பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு, இமாச்சலப் பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர், மேற்குவங்கத்தில் ராய்கஞ்ச், ரனாகாட் தெற்கு, பாக்தா, மாணிக்தலா என 7 மாநி லங்களின் 13 சட்டமன்ற தொகுதிகள் காலி யானதாக இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
இந்த 13 தொகுதிகளுக்கும் புதனன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், ஜூலை 13 அன்று வாக்கு எண் ணிக்கை நடைபெறுகிறது என்பது குறிப்பி டத்தக்கது.
புதுதில்லி
போலியான செய்திகளை பரப்புவதாக போட்டுடைத்த விக்கிபீடியா
நீதிமன்றத்திற்கு ஓடிய ஏஎன்ஐ செய்தி நிறுவனம்
நாட்டின் முன்னணி செய்தி நிறு வனங்களில் ஒன்றான ஏஎன்ஐ (Asian News International) செய்தி நிறுவனம், போலிச் செய்திகளை அதிகமாக வெளியிடுவதாக உலகின் முன் னணி தகவல் களஞ்சிய நிறுவனமான அமெரிக்காவின் விக்கிபீடியா (Wiki pedia) நிறுவனம் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக விக்கிபீடியா வெளியிட்டுள்ள தகவலில்,”ஏஎன்ஐ நிறுவனம் போலி இணையதளங்களில் இருந்தும், நடக்காத சம்பவங்களை நடந்த தாகவும் கூறி தவறான செய்திகளை வெளி யிடுகின்றது” என கூறியது.
இந்நிலையில், தங்கள் மீது குற்றம் சாட்டிய விக்கிபீடியா மீது ஏஎன்ஐ நிறு வனம் தில்லி உயர்நீதிமன்றத்தில் அவ தூறு வழக்கு தொடர்ந்து, ரூ.2 கோடி இழப்பீடு கோரியது. இந்த வழக்கு செவ் வாயன்று நீதிபதி நவீன் சாவ்லா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு, “தனிப் பட்ட கருத்துகளை கூறுவதற்கு விக்கி பீடியாவுக்கு உரிமை உள்ளது. எனினும் நீதிமன்றத்தில் தனது நடவடிக்கை குறித்து விக்கிபீடியா விளக்கம் அளிக்கும்” எனக் கூறி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் மனு வுக்கு விக்கிபீடியா பதில் அளிக்குமாறு நீதிபதி நவீன் சாவ்லா உத்தரவிட்டார்.
புதுதில்லி
கெஜ்ரிவாலுக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
மதுபான கொள்கை வழக்கில் தொடர்பு உள்ளதாக கூறி தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கி ணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரி வாலை கைது செய்து, திகார் சிறையில் அடைத்துள்ளது அமலாக்கத்துறை. இதே மதுபான வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு சிபிஐயும் தனியாக நெருக்கடி அளித்து வருகிறது.
இந்நிலையில் ஜாமீன் மனுக்கள் அனைத்தும் நிலுவையில் உள்ள நிலை யில், கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக் கத்துறை தில்லி ரோஸ்அவென்யூ நீதி மன்றத்தில் மதுபான வழக்கு தொடர்பாக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய் துள்ளது. அமலாக்கத்துறையின் குற்றப் பத்திரிகையை தில்லி நீதிமன்றம் விசா ரணைக்கு ஏற்றுள்ளது.
கொச்சி
“ஏர் கேரளா” சேவைக்கு ஒன்றிய அரசு அனுமதி
கடந்த 2005இல் முதல்வராக இருந்த உம்மன் சாண்டி வளை குடா நாடுகளில் வாழும் மலை யாள மக்களின் கனவு திட்டம் என்று கூறி கேரள மாநிலத்திற்கென்று தனி விமான சேவை திட்டத்தை உருவாக்கினார். இந்த திட்டத்திற்கு “ஏர் கேரளா” பெயர் வைக் கப்பட்ட நிலையில், கொச்சியை தலை மையிடமாகக் கொண்டு “ஏர் கேரளா” விமான நிறுவனத்தை உருவாக்கும் வேலைகள் வேகமெடுத்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த திட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது துபாயை தளமாகக் கொண்ட தொழில் முனைவோர்களான அபி அகமது மற்றும் அயூப் கல்லடா ஆகியோரது தீவிர முயற்சியால் 19 வருடம் கழித்து “ஏர் கேரளா” சேவை சாத்தியமாகியுள்ளது. ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இந்த சேவைக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ள தன் மூலம் “ஏர் கேரளா” நிறுவனம் 2025இன் தொடக்கத்தில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. முதலில் மூன்று விமானங் களுடன் (ATR 72-600) தொடங்கப்படும் இந்த விமான சேவை பின்னர் படிப்படி யாக வளைகுடா நாடுகளுக்கு விரிவுபடுத் தப்படும் என செய்திகள் வெளியாகி யுள்ளன.