india

img

தோல்வி பயத்தில் அலறும் அமித்ஷா

நாடு முழுவதும் “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவு அலை பெருகி வரும் நிலை யில், 330 தொகுதிகளுக்கு மேல் வெற்றியை ருசித்து “இந்தியா” கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என பெரும்பாலான ஊடகங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகின்றன. இதனால் தோல்வி பயத்தில் மிரண்டுள்ள பாஜக “இந்தியா” கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை விலை க்கு வாங்கியும், சுயேச்சை வேட்பாளர்களை மிரட்டி யும் வேட்புமனுவை வாபஸ் பெற வைத்து போட்டி யின்றி தேர்வு முறையில் வெற்றியை பெற தீவிரமாக களமிறங்கியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் காங்கிரஸ் வேட்பாளரை விலைக்கு வாங்கி அங்கு பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றுள்ள நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளரை தங்கள் பக்கம் வளைத்து அங்கும் போட்டியின்றி தேர்வாகும் வேலையை பாஜக துவங்கியுள்ளது.

குஜராத் போலீசாருடன் பாஜக கூட்டு
இதன் வரிசையில் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், ஒன்றிய உள்துறை அமைச்ச ருமான அமித் ஷா தான் போட்டியிடும் காந்தி நகர் தொகுதியில், அமித்ஷாவை எதிர்த்து கள மிறங்கிய 16 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் மற்றும் குஜராத் மாநில போலீசாரின் அச்சுறுத்தலால் போட்டியில் இருந்து விலகி யதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜபுத்தி ரர்கள் எதிர்ப்பு, “இந்தியா” கூட்டணிக்கு கிடைக்கும் ஆதரவு உள்ளிட்டவைகளால் அலறும் பாஜக  சூழ்ச்சி முறையில் வெற்றி பெற வேட்புமனுக் களை வாபஸ் வாங்கும் வேலையில் இறங்கி யுள்ளது. அமித் ஷாவுக்கே இந்த நிலை என்றால்  மற்ற வேட்பாளர்களின் நிலைமை பற்றி சொல்லவா வேண்டும். காந்திநகரிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டும் பாஜகவின் கீழ்த்தர மான சம்பவத்திற்கு “இந்தியா” கூட்டணிக் கட்சி யினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.