உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத்தில் திடீர் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் என 13,000 பேர் சிக்கிக்கொண்டனர். 3 நாட்கள் கடும் போராட்டத்துக்குப் பின் ராணுவத்தின் உதவியால் 13,000 பேரும் சனியன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கேதார்நாத்தில் நிலைமை சரியில்லாததால் அங்கு யாரும் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.