india

தமிழக வெள்ள நிவாரணமாக ரூ. 6230 கோடி வழங்க வேண்டும்

புதுதில்லி, டிச. 5 - மிக்ஜம் புயல் மழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு உடனடியாக மத்தியக் குழுவை அனுப்பி மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் பூஜ்ய நேரத்தின்போது உரையாற்றிய டி.ஆர். பாலு எம்.பி. “மழை வெள்ளம் பாதிப்புக்கு நிவாரணமாக ரூ. 6 ஆயிரத்து 230 கோடி கேட்டு தமிழ்நாடு அரசு மூன்று மனுக்களை அனுப்பி உள்ளது. அவற்றைப் பரிசீலித்து முதற்கட்டமாக ரூ. 5 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.