india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கடந்த ஆகஸ்ட் 30 அன்று நிலவரப்படி, புழக் கத்தில் இருந்த 97.96 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மீதம் ரூ.7,261 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் இருப் ்பதாகவும் ரிசர்வ் வங்கி தகவல் அளித்துள்ளது. 

“ராம்கிரி மகாராஜ்க்கு எதிராக யாராவது பேசினால் மசூதிக்குள் நுழைந்து ஒவ்வொ ருவரையும் அடித்து உதைப்போம்” என மகா ராஷ்டிரா பாஜக எம்எல்ஏ நிதேஷ் ராணே வன் முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார். 

22ஆவது சட்ட ஆணையத்தின் ஆயுட்காலம் ஆகஸ்ட் 31 அன்றுடன் நிறைவடைந்த நிலை யில், 23ஆவது சட்ட ஆணையத்தை ஒன்றிய அரசு அமைத்தது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய சட்ட ஆணை யத்தின் ஆயுட்காலம் 3 ஆண்டுகாலம் ஆகும். 

மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் செப்., 5 அன்று குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி, தன்னை சித்ரவதை செய்ததாக நடிகை புகார் தெரிவித்த நிலையில், இடுக்கி மாவட்டம் அடிமாலி காவல்நிலையத்தில் நடிகர் பாபுராஜ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவ ரங்களை தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச பாஜக அரசு அறிவித்துள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மற்றும் பீஜப்பூர் எல்லையில் பாதுகாப்பு படையின ருக்கும், மாவோயிஸ்டுகளுக்குமிடையே துப்பாக்கிச் சண்டையில் 9 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 

நெட்பிலிக்ஸ் வெளியிட்ட ஐஇ-814 வெப்தொ டரில் கதாபாத்திரங்களுக்கு இந்துக்கள் பெயர் வைத்து சர்ச்சையானதால், விளக்கமளிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், “இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். இனி முழுமையாக ஆய்வு செய்த பிறகே தொடர்களை வெளியிடுவோம்”  என நெட்பிலிக்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது. 

ராஞ்சி

போலீஸ் உடற் தகுதித் தேர்வில் மயங்கி விழுந்து 11 பேர் பலி
ஜார்க்கண்டில் சோகம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 600 கான்ஸ்டபிள் பணியிடங்க ளுக்கான உடற்தகுதித் தேர்வு ஆகஸ்ட் 22 முதல் நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 7 மையங்களில் இந்த உடற்தகுதித் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், பல மையங்களில் தேர்வர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரு கின்றன. பாலமு பகுதியில் 4 பேர்,  கிரிதிஹ் மற்றும் ஹசாரிபாக்கில் தலா 2 பேர், ராஞ்சி, கிழக்கு சிங்பூம் மற்றும் சாஹிப்கஞ்சில் தலா ஒருவர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் உடற்தகுதித் தேர்வு பிரிவை கவனிக்கும் ஐஜி அமோல் வி.ஹோம்கர் செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது கூறியுள்ளார். 

என்ன காரணம்?

ஜார்க்கண்ட் போலீஸ் தகுதி தேர்வில் ஆண்கள் 10 கி.மீ தூரத்தை ஒரு மணி நேரத்திலும், பெண்கள் 5.5 கிமீ தூரத்தை அரை மணிநேரத்திலும் கடக்க வேண்டும் என விதிகள் உள்ளன. போலீஸ் உடற்தகுதித் தேர்வில் ஓட்டப்பந்தயம் மிக முக்கியமானது என்ற நிலையில், கொ ளுத்தும் வெயிலில் தேர்வாளர்களை ஓட விட்டதன் காரணமாகவே அவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுதில்லி

‘மரண வாக்குமூலங்கள் பதிவு செய்யும் நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது’

தமிழ்நாட்டின் திருவண்ணா மலையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது மனைவி ஜோதியை மண் ணெண்ணெய் ஊற்றி எரித்தார். மருத்துவமனை அறிக்கையின் அடிப்ப டையில் மாவட்ட நீதிபதி முன்பாக ஜோதி யின் மரண வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டது. அதில், கொடுமை செய்தது, கணவர் தன்னை தீ வைத்து எரித்ததை ஜோதி உறுதிப்படுத்தினார். இதைய டுத்து திருவண்ணாமலை மகிளா நீதி மன்றம், ரமேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. நீதிமன்றங்கள் வழங்கிய உத்த ரவுக்கு எதிராக ரமேஷ் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில்  செவ்வாயன்று வழக்கு விசார ணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்தி ற்குப் பின் உச்சநீதிமன்ற நீதிபதிகள், “மரண வாக்குமூலங்கள் பதிவு செய்யும் விவகாரத்தில் நீதிபதிகளின் செயல்பாடுக ளை எப்படி சந்தேகிக்க முடியும். அதற் கான முகாந்திரமே கிடையாது” எனக் கூறி ரமேஷின் மனுவை தள்ளுபடி செய்து முடித்து வைத்ததோடு, ரமேஷின் ஆயுள் தண்டனையையும் உறுதி செய்து தீர்ப்பு வழங்கினர்.