india

ஜனநாயகத்திற்கு விரோதமானது; கொடுங்கோன்மை மிக்கது!

புதுதில்லி, ஜூலை 2 - நாடாளுமன்றத்தில் போதிய விவாதமோ, கலந்துரையாடலோ இல்லாமலும், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு செவி மடுக்கா மலும், சட்டவல்லுநர்களின் கருத்துக்களை எதிர்ப்புக்களையும் மீறி, புதிய குற்றவியல் சட்டங்களை  ஜூலை 1 முதல் மோடி அரசு நடை முறைப்படுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வழக்கறிஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர்.

இந்நிலையில், ஜனநாய கத்திற்கு விரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ஏற்க முடி யாது; என்றும், மோடி அரசு அவற்றை அமல்படுத்தக் கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம்  புதுதில்லியில் ஜூன் 28-30 தேதி களில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாவது:

புதிய சட்டங்களை அமல்படுத்தாதே!

புதிய குற்றவியல் சட்டங்களை  2024 ஜூலை 1 முதல் மோடி அர சாங்கம் அமல்படுத்தியுள்ளது. இதற்கு தன் வலுவான எதிர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக் குழு தெரிவித்துக் கொள்கிறது. இந்தச் சட்டங்கள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பெரிய அளவில் இடை நீக்கம் செய்யப்பட்ட சமயத்தில், உரிய விவாதங்கள் நடத்திடாமல், அவசரகதியில், அப்பட்டமான ஜனநாயக விரோத முறையில், கொண்டுவரப்பட்டவையாகும். இவை கொடுங்கோன்மை மிக்க சட்டங்களாகும்.  

ரகசியமாக நுழைந்த  தேசத் துரோகச் சட்டம்!

உச்ச நீதிமன்றம், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124ஏ என்னும் தேசத்துரோகக் குற்றப் பிரி வை ஒழித்துக்கட்டியுள்ள அதே சமயத்தில், இப்போது அதுவே ‘பாரதிய நியாய சம்ஹிதா’ என்னும் புதிய சட்டத்தின் 154ஆவது பிரி வின்கீழ் ரகசியமாகக் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மேலும், இதில் முந்தைய 124-ஏ சட்டத்தில் இல்லாத இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு பற்றிய குறிப்புகளும் உள்ளன. இது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அப்பட்டமாக மீறும், அதே சமயத்தில், புதிய சட்டம் மக்களை ‘தேச விரோதிகள்’ என்று குற்றம் சாட்டி தண்டனை வழங்கு வதை எளிதாக்குவதாக உள்ளது.

90 நாட்கள் வரை  ரிமாண்ட் செய்யலாம்!

குடிமக்களுக்கு தீங்கு விளை விக்கும் வகையில் காவல்துறை யினரின் அதிகாரங்களை அதிகரிக் கும் பல விதிகள் உள்ளன. உதாரண மாக, புதிய சட்டங்கள், முந்தைய  சட்டத்தில் நிர்ணயித்த 15 நாள் வரம்புக்கு அப்பால் குற்றம்சாட்டப் பட்டவரை காவல் அடைப்பில் (remand) வைக்க வாய்ப்பளிக்கின் றன. புதிய விதியின்படி, குற்றம் சாட்டப்பட்டவரை 90 நாட்கள் வரை காவல் அடைப்பில் வைத்திட முடி யும். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது கூட- அடையாளம் காணக் கூடிய குற்றத்தின் போது ஒரு போலீஸ் அதிகாரியால்- 15 நாட்கள் வரை விசாரணைக்குப் பிறகுதான் செய்யப்படும்.

யாரையும் ‘உபா’ சட்டத்தில் கைது செய்யலாம்...

மற்றுமொரு மிகவும் ஆபத்தான அம்சம், புதிய சட்டத்தின்படி காவல் நிலைய புலனாய்வு அதிகாரியே, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தையும் புலனாய்வு செய்திடலாம். ஒருவரை இச்சட்டத் தின்கீழ் கைது செய்திட அரசின் தனி அனுமதி தேவையில்லை. இவ்வாறு எந்தவொரு காவல்துறை அதிகாரியும் பயங்கரவாதத்தின் கீழ் விசாரணை செய்திட முடியும்.

ஜூலை 1-க்கு முன் நடந்த குற்றங்களைப் பொறுத்தவரை எந்தச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்வது என்பது குறித்தும் தெளி வுபடுத்தப்படவில்லை. இது தொடர் பாக சர்ச்சைகள் எழக்கூடும். மேல் முறையீடுகளும் சிக்கலானவை களாக மாறக்கூடும்.

பிற்போக்குத்தனமான - கொடூரமான சட்டங்கள்

இந்த புதிய சட்டங்கள், சட்டம் என்ன சொல்கின்றன என்பதில் நிச்சயமற்ற தன்மையையும் தெளி வின்மையையும் அறிமுகப்படுத்து கிறது. இது ஏற்றுக்கொள்ள முடி யாதது. இது, லட்சக்கணக்கான குற்ற வழக்குகளின் தேக்கத்தை அதிகரிக்கவே செய்யும்.

புதிய சட்டம் மிகவும் பிற்போக்குத் தனமானதும், கொடூரமானதுமாகும் என்பதால் இது கைவிடப்பட வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கம், பொறுப்புமிக்க குடிமக்கள் மற்றும் குடிமைச் சமூக அமைப்பு கள் தங்கள் ஆழமான கருத்துக் களை வெளிப்படுத்தி இருக்கின்ற னர். அவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தன்னை இணைத்துக்கொள்கிறது.

இவ்வாறு மத்தியக்குழு அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஏப்ரலில் அகில இந்திய மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு, 2025ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. புதுதில்லியில் ஜூன் 28-30 தேதிகளில் நடைபெற்ற மத்தியக்குழுக் கூட்ட முடிவில், இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. முன்னதாக 2024 செப்டம்பரிலிருந்து (கிளை, பகுதி, ஒன்றியம், தாலுகா, மாவட்டம், மாநிலம் என) அனைத்து மட்டங்கள் அளவிலான கட்சி மாநாடுகளை நடத்துவது தொடர்பான கால அட்டவணையையும் மத்தியக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.