india

ஊரக வேலைத் திட்டத்திற்கு வெறும் 86 ஆயிரம் கோடி தானா?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள ஒன்றிய இடைக்கால பட்ஜெட், நாட்டில் விவசாயத் தொழி லாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வில்லை. விவசாயத் தொழிலாளர்களை  மோடி அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது.

வாக்குகளைப் பெறுவதற்காக வகுப்புவாதப் பிரிவினை யைப் பயன்படுத்தும் பாஜக, ஏழைகளின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீது   வெட்கக்கேடான தாக்குதலைத் தொடர்கிறது. ஊரக வேலைத் திட்டத்திற்கான  நிதி ஒதுக்கீடு வெறும் 86000 கோடியே. இது கடுமையாக திட்டத்தை பாதிக்கும்.  இந்த ஒதுக்கீடு அதிர்ச்சியளிக்கிறது. 2022-23 ஒதுக்கீடாக இருந்த 90805.92 கோடியை  கூட தரவில்லை.

 திட்டத்தின் ஒதுக்கீடு தொகையை அரசு உயர்த்த வில்லை. விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்கான திட்டங்க ளுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது, இதனால் மாநிலங்களின் சுமை அதிகரிக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை   திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.

இது கிராமப்புற ஏழை களின் வாழ்வில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். பிரதான் மந்திரி அன்ன யோஜனா திட்ட நிதி 2200.00 கோடியில் இருந்து 1737.50 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேசன் விநியோகம் சீர்குலையும் ஆபத்தில் உள்ளது

உணவு, உரமானியங்கள் வெட்டு
பொது விநியோக திட்டத்துக்கான ஒதுக்கீட்டைக் குறைத்தது மட்டுமல்ல; நலத் திட்டங்களுக்காக மாநிலம் மற்றும் யூனி யன் பிரதேசங்களுக்கு பருப்பு விநியோகத்தை ஒன்றிய அரசாங் கம் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டது. இது ஏழைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாட்டை அதிகரிக்கவே செய்யும். 

பிரதான் மந்திரி கிசான் மன்தன் யோஜனா திட்டத் திற்கான நிதி 138 கோடியில் இருந்து 100 கோடியாக குறைக்கப் பட்டுள்ளது. உரத்திற்கான மானியம் 60,300 கோடியிலிருந்து வெறும் 45000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழ கத்திற்கு உணவு மானியத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடிகளுக்கான தொகை 323 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இது  மனிதாபிமானமற்ற நடவடிக்கை. 

பிரதம மந்திரி சாலை மேம்பாடு திட்டத்திற்கான நிதி  19000 கோடியில் இருந்து 12000 கோடியாக குறைக்கப்பட்டுள் ளது. பிஎம் போஷான் (PM POSHAN) என மறுபெயரிடப்பட்ட மத்திய  உணவுத் திட்டத்திற்கான நிதி பணவீக்கச் சூழ்நிலைகள் இருந்த போதிலும் 2022-23 வரவு செலவுத் திட்ட மதிப்பீடு களில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரவு-செலவுத் திட்டம், ஏழைகளின் நிலை குறித்து ஆளும் வர்க்கங்களின் அலட்சியப் போக்கின் நிரூபணமாகும். இந்த மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எதிராக  நாடு முழுவதும் கண்டன குரலை எழுப்பிட அறைக்கூவி அழைக்கிறோம்!

(அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் 
தலைவர் ஏ.விஜயராகவன், 
பொதுச் செயலாளர் பி.வெங்கட் ஆகியோர் விடுத்துள்ள விமர்சன அறிக்கையில் இருந்து)