இந்திய உணவுக் கழகத்துக்கு கூடு தல் மூலதன நிதியாக ரூ.10,700 கோடி ஒதுக்க ஒன்றிய அமைச்ச ரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக தில்லியில் நடை பெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட் டத்திற்கு பிறகு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ் ணவ் கூறுகையில்,”நாட்டில் உணவுப் பொருள் கொள்முதலில் இந்திய உண வுக் கழகம் (எப்சிஐ) முக்கிய பங்காற்றி வருகிறது. அரசு அறிவிக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் உணவு தானியத்தை எப்சிஐ கொள்முதல் செய்தது. எப்சிஐ பணியை விரிவுபடுத்தும் வகையில் அதன் மூல தனத்தை அதிகரிக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதன்காரணமாகவே இந்திய உணவுக் கழகத்துக்கு கூடுதல் மூலதன நிதியாக ரூ.10,700 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது” என அவர் கூறினார்.