india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மீண்டும் வாயுக் கசிவு - 2 மாணவிகள் மயக்கம்; திருவொற்றியூர் தனியார் பள்ளி தற்காலிகமாக மூடல்!

சென்னை, நவ. 4 - சென்னை திருவொற்றியூர் கிராமத்து தெருவில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 

சில நாட்களுக்கு முன்பு, இப்பள்ளியில் வாயுக்கசிவு ஏற்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயங்கி விழுந்தனர். மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு பத்து நாட்களுக்கு இந்த தனியார் பள்ளியை மூட உத்தரவிட்டனர். இந்நிலையில், திங்களன்று (நவ. 4) பள்ளி மறுபடியும் திறக்கப்பட்டது. காலை வழக்கம் போல் பள்ளி செயல்பட்டு வந்த நிலையில், மீண்டும் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 2 மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து, பள்ளியை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வாயுக் கசிவு ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிந்து, முழுமையான ஆய்வுகள் நடத்தி நிரந்தரமான தீர்வு காணப்பட்ட பிறகே, தனியார் பள்ளியைத் திறக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல். சுந்தரராஜன் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான், மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் கோவையில் இன்று கள ஆய்வு

கோயம்புத்தூர், நவ. 4 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செவ்வாய் (இன்று) மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்கள் கோவை மாவட்டத்தில் கள  ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் நிறை வேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா என்பது குறித்து தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார். இந்த நிகழ்வை நவம்பர் 5 முதல் கோவை மாவட்டத்தில் இருந்து தொடங்குகிறார்.

இதற்காக செவ்வாயன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு கோவை விமான நிலையத்திற்கு வந்தடை கிறார். அங்கு அவருக்கு அமைச்சர்  செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அன்று காலை விளாங்குறிச்சியில் உள்ள ஐடி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறார். 

தொடர்ந்து மாலையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்து கொள்ளும் முதல்வர்,  அன்று இரவு அரசு விருந்தினர் மாளி கையில் தங்குகிறார். பின்னர், அடுத்த நாள் 6-ஆம் தேதி காலை,  கோவை மத்தியச் சிறை மை தானத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மை யத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அடிக்கல் நாட்டி பேசுகிறார்.

முதல்வர் கலந்து கொள்ள உள்ள இடங்களில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநக ராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, எம்பி கணபதி ராஜ்குமார், துணைமேயர் வெற்றிச்செல்வன், கோவை திமுக மாவட்டச் செய லாளர்கள் நா. கார்த்திக், தொ.அ. ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மெரினாவில் போலீசாரிடம் அநாகரீகமாக நடந்த  இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சென்னை, நவ.4- சென்னை மெரினா கடற்கரை  அருகே நள்ளிரவில் காவல்துறை யினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை பகுதியில் லூப்  சாலையில் நள்ளிரவில் நின்று கொண்டிருந்த காரை ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் எடுக்குமாறு கூறியபோது, வேளச் சேரியைச் சேர்ந்த சந்திர மோகன் என்பவரும் அவரது தோழி தனலெட்சு மியும் காவல் துறையினரை ஆபாச மாக திட்டினர். இதையடுத்து, மயி லாப்பூர் காவல் நிலைய போலீஸ்கா ரர் அளித்த புகாரின் அடிப்படையில், மயிலாப்பூர் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட, சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை  அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தன. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியை நீதி மன்றத்தில் தாக்கல் செய்து சந்திர மோகன், தனலட்சுமி ஆகிய இரு வருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிபதி, இருவரின் ஜாமீன் மனுவை யும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 27 பேரின் காவல் நீட்டிப்பு

சென்னை, நவ. 4 - பகுஜன் கட்சி சமாஜ் கட்சி தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்க டம், வழக்கறிஞர் அருள், அதிமுக நிர்வாகி மலர்க்கொடி, தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகி ஹரிகரன், பாஜக நிர்வாகி செல்வராஜ், வழக்கறி ஞர் அஸ்வத்தாமன் அவரது தந்தை பிரபல ரவுடி நாகேந்திரன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களில் திருவேங்கடம், சீசிங் ராஜா இருவரும் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப் படும் பாம் சரவணன், சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த கொலை வழக்கில் குற்றம் சுமத்தப் பட்டுள்ள 30 பேருக்கும் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் பென்டிரைவ் மூலம் கொடுத்தபோது அதை வாங்க மறுத்து, காகிதங்களில் வழங்க வேண்டும் என்று குற்றவாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திங்களன்று (நவ.4) இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள 27 பேரின் நீதிமன்ற காவலை நவம்பர் 14-ஆம் தேதி வரைக்கும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.