நாடு முழுவதும் 2018-2023 வரை உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட 650 நீதிபதிகளில் 492 பேர் (75.69%) உயர் சாதியினர் என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்து அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
மாநிலங்களவையில் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விகள்,
- தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்த பெண் நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை மற்றும் மாநில வாரியாக மற்றும் பிரிவு வாரியான விவரங்கள்.
- உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கான நடைமுறைக் குறிப்பாணைக்கு துணையாக அரசாங்கம் உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரைகள் ஏதேனும் அனுப்பியுள்ளதா?
- அப்படியானால், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் அதற்கான பதிலின் விவரங்கள்.
ஆண்டு வாரியாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவரம்
2018-இல் நியமிக்கப்பட்ட 108 நீதிபதிகளில் 82 பேர் உயர் சாதியினர், 11 பேர் பிற்படுத்தப்பட்டோர்,11 பேர் சிறுபான்மையினர், 2 பேர் பட்டியலினத்தவர், 2 பேர் பழங்குடியினர் ஆவர்.
2019-இல் நியமிக்கப்பட்ட 81 நீதிபதிகளில் 64 பேர் உயர் சாதியினர், 8 பேர் பிற்படுத்தப்பட்டோர், 3 பேர் சிறுபான்மையினர், 3 பேர் பட்டியலினத்தவர், ஒருவர் பழங்குடியினர் ஆவர்.
2020-இல் நியமிக்கப்பட்ட 66 நீதிபதிகளில் 52 பேர் உயர் சாதியினர், 11 பேர் பிற்படுத்தப்பட்டோர், ஒருவர் சிறுபான்மையினர், 2 பேர் பட்டியலினத்தவர் ஆவர். பழங்குடி பிரிவைச் சேர்ந்த ஒருவர் கூட உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.
2021-இல் நியமிக்கப்பட்ட 120 நீதிபதிகளில் 85 பேர் உயர் சாதியினர், 15 பேர் பிற்படுத்தப்பட்டோர், 13 பேர் சிறுபான்மையினர், 5 பேர் பட்டியலினத்தவர், 2 பேர் பழங்குடியினர் ஆவர்.
2022-இல் நியமிக்கப்பட்ட 165 நீதிபதிகளில் 137 பேர் உயர் சாதியினர், 17 பேர் பிற்படுத்தப்பட்டோர், 5 பேர் சிறுபான்மையினர், 6 பேர் பட்டியலினத்தவர் ஆவர். பழங்குடி பிரிவைச் சேர்ந்த ஒருவர் கூட உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.
2023-இல் நியமிக்கப்பட்ட 110 நீதிபதிகளில் 72 பேர் உயர் சாதியினர், 20 பேர் பிற்படுத்தப்பட்டோர், 8 பேர் சிறுபான்மையினர், 5 பேர் பட்டியலினத்தவர், 5 பேர் பழங்குடியினர் ஆவர்.
2018-2023 வரை உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட 650 நீதிபதிகளில் 76 பேர் பிற்படுத்தப்பட்டோர், 36 பேர் சிறுபான்மையினர், 23 பேர் பட்டியலினத்தவர், 10 பேர் பழங்குடியினரும், 13 பேர் குற்த்த தகவல் கிடைக்கவில்லை என்று அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் குறிப்பிட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பிற்படுத்தப்பட்டோர்- 11.69%, சிறுபான்மையினர் – 5.54%, பட்டியிலினத்தனவர் - 3.4%, பழங்குடியினர் - 1.54% எனும் சதவிகிதத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் மொத்த நீதிபதிகள் 824 பேரில் 111(13.5%) பேர் தான் பெண்கள்.
இவற்றையெல்லாம் விவரித்து ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் வியாழன் (டிச.8) அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யதார்.
நீதிபதிகள் நியமனத்தில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு உரியப் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து பிரிவுக்கும் நீதித்துறையில் பிரதிநிதித்துவம் தரும் வகையில் நீதிபதிகளை நியமிக்கும் பொறுப்பு கொலீஜியத்திடமே உள்ளது என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.