வடமேற்கு இந்தியா, மத்திய இந்திய பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.
ராஜஸ்தானில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு பகல்நேர வெப்பநிலை அதிகரித்து அனல் காற்று வீசக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
தெற்கு அரியானா, தில்லி, தென்மேற்கு உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரத்தின் விதர்பா ஆகிய பகுதிகளில் மே 8,9 ஆகிய நாட்களில் அனல்காற்று வீசக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலையின் காரணமாக வெள்ளியன்று நாட்டின் மின் தேவை எப்போதும் இல்லா வகையில் 207 ஜிகா வாட்டாக அதிகரித்துள்ளது.