headlines

img

சிங்காரவேலு ஆணைய அறிக்கை எங்கே?

தர்மபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரிப்ப தற்கு 2013ஆம் ஆண்டு தமிழக அரசால் அமைக்கப் பட்ட நீதிபதி சிங்காரவேலு விசாரணை ஆணைய அறிக்கையை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும் என்றும், அந்த அறிக்கையின் அடிப் படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் மீண்டும் குரல் எழுப்பும் சூழல் உருவாகியுள்ளது. தர்மபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞர் இளவரசன் அதே ஊரைச் சேர்ந்த திவ்யா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அதையொட்டி மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு, தலித் சமூ கத்தைச் சேர்ந்தவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இளவரசனையும் திவ்யாவையும் பிரிப்பதற்கு காவல்துறை துணையுடன் சாதிய ஆதிக்க சக்தி கள் மேற்கொண்ட வெறித்தனமான முயற்சிகள் இறுதியில் வெற்றிபெற்றன.

அந்த சம்பவத்திற்குப் பிறகு இளவரசன் மர்ம மான முறையில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் இறந்து கிடந்தார். அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் எனக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தற்கொலை யாக இருப்பதற்கு வாய்ப்பில்லை, அவர் திட்ட மிட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட இயக்கங்கள் எழுப்பின. அன்றைய முதல்வர் ஜெயலலிதா நீதிபதி சிங்காரவேலு ஆணையம் அமைத்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டார். சிங்காரவேலு ஆணையம் 5 ஆண்டுகள் விசாரணை செய்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு. ஒன்பது மாதங்கள் கடந்த பிறகும் தமிழக அரசு அதை வெளியிடவில்லை. அந்த அறிக்கையின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என் பதையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஆங்கில ஏடான ‘பிரண்ட்லைன்’ அந்த அறிக்கை யின் இறுதிப் பகுதியை வெளியிட்டிருக்கிறது. அதில், ‘இளவரசன் தற்கொலை செய்துகொண் டார்’ என்று நீதிபதி தெரிவித்திருப்பதாக குறிப் பிடப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் கேள்வி எழுகிறது.

சிங்காரவேலு ஆணையத்தின் முழுமையான அறிக்கையைப் பொதுமக்களுக்கு வெளியிடா மல் தமிழக அரசு ஒளித்து வைத்திருப்ப தற்குக் காரணம் என்ன ? மக்களின் பயத்தைப் போக்கவும் குழப்பத்தை  தீர்க்கவும் சிங்காரவேலு ஆணையத்தின் முழு மையான அறிக்கையைக் காலந்தாழ்த்தாமல் தமிழக அரசு வெளியிட வேண்டும். அந்த அறிக்கையின் பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை என்பதையும் வெளிப் படையாக தெரிவிக்க வேண்டும். அறிக்கை வெளியிடப்பட்டால்தான், சிங்காரவேலு ஆணையம் உண்மைகளைச் சொல்லியிருக் கிறதா? மூடி மறைத்திருக்கிறதா என்பதெல்லாம் தெரியவரும்.

;