headlines

img

உடன் திரும்பப் பெறுக!

தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்குச் சாதகமாக இருக்கும் மின்சார திருத்த மசோதா வை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையி டுவதாக உள்ளதால் திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி யிருக்கிறார்.

இது தில்லியின் எல்லைப்பகுதியில் ஓராண்டுக்கும் மேலாக போராடிக் கொண்டி ருக்கும் விவசாயிகளின் முக்கியமான கோரிக்கை யுமாகும். இந்த மின்சார சட்டத்திருத்த மசோதா வை திரும்பப் பெற வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் பல்வேறு தொழிற் சங்க இயக்கங்க ளும் விவசாயிகள் சங்கங்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

வேளாண் விரோத மசோதாக்கள் மூன்றையும் திரும்பப் பெறுவதைப் போல மின்சார சட்டத் திருத்த மசோதாவையும் திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றன. ஆயினும் மோடியின் ஒன்றிய அரசு தான் அது பற்றி வாய் திறக்காமல் மவுனித்து வருகின்றது.

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு வீடுகளுக்கு வழங்கும் இலவச மற்றும் மானிய விலையிலான மின்விநியோகம் ஆகியவை பாஜக அரசு கொண்டு வரும் இந்த சட்டத்தால் ஒழிக்கப்பட்டு விடும். கொரோனாவாலும் ஒன்றிய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு,உணவு, கட்டு மானப் பொருட்கள் உள்ளிட்ட இதர அத்தியா வசியப் பொருட்கள் விலை உயர்வால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு இது மேலும் பெரும் சுமை யாக ஆகிடும். எனவே இந்த மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறுவது அவசியமாகும்.

அதுமட்டுமின்றி மாநில அரசுகள் மூலதனம் போட்டு உருவாக்கி வைத்துள்ள மின்விநியோகக் கட்டமைப்புகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தி லாபம் பெறுவதற்கான வழியை இந்த மசோதா ஏற்படுத்தித் தருகிறது. ஒன்றிய  பாஜக அரசின் தீவிர தனியார்மயமாக்கல் இதிலும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. எந்தவித அனு பவமும்  இல்லாமல் ஒரு நிறுவனம் ஆரம்பித்து வெறும் 60 நாட்கள் ஆனால் போதும், அதற்கு மின் விநியோகத்தை மேற்கொள்ள ஒன்றிய அர சால் அனுமதி வழங்கப்படும். இது மிகவும் ஆபத் தானது மட்டுமல்ல, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக் கட்டும் செயலாகும்.

அணைப் பாதுகாப்பு மசோதாவை அண்மையில் கொண்டு வந்து மாநில அரசின் உரிமையைப் பறித்தது போல் இதுவும் மாநில மின் பகிர்மான நிறுவனங்களை தனது கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ள வழியேற்படுத்தி விடும். பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களை சாகடிக்கும் வேலை செய்து கார்ப்பரேட் கம்பெனி களை வாழ வைப்பது போலவே இத்துறையிலும் நடக்கும். எனவே மின்சார திருத்தச் சட்ட மசோதாவை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.