headlines

img

வயிற்றில் அடிக்காதே!

கோதுமையையே பிரதான உணவாகக் கொண்டுள்ள வடமாநிலங்கள் உள்பட 10 மாநி லங்களுக்கான கோதுமை ஒதுக்கீட்டை ஒன்றிய பாஜக அரசு கடுமையாக வெட்டியுள்ளது. இத னால் அதிர்ச்சியடைந்துள்ள உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநில அரசுகள் கூட, மோடி அரசின் தாக்குதலை பொறுக்க முடியாமல், முடிவைத் திரும்பப்பெறு மாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.

கோவிட் 2ஆம் அலை தீவிரமாக பாதித்த சமயத்தில் உள்நாட்டு மக்களை கவனிக்காமல் வெளிநாடுகளில் பெருமை தேடிக் கொள்வதற்காக மோடி அரசு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது. இதனால் இந்தியாவில் நிலைமை மோசமானது. வேறு வழியில்லாமல் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. அதேபோல, இந்தியா உலகிற்கே உணவளிக்கும் என்று மோடி அரசு படாடோபமாக கூறி, இந்திய கோதுமையை பெருமளவில் ஏற்றுமதி செய்தது. ஆனால் அதேவேளையில் உள்நாட்டில் விளைந்த கோதுமையை அரசு நேரடியாக கொள்முதல் செய்யாமல் தனியார் பெரும் கார்ப்பரேட்டுகளை நம்பி கொள்முதல் பணியை ஒப்படைத்தது. இந்த மோசடியின் விளைவாக நடப்பாண்டில்  கோதுமை கொள்முதல் 56.65 சதவீதமாக பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இதுமட்டுமல்ல, நடப்பாண்டில் அரசின் முறையான திட்டமிடல் இல்லாததன் விளைவாக கோதுமையின் உற்பத்தியும் வெகுவாக குறைந்தது. இவற்றின் மொத்த விளைவு, இந்திய மக்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக கோதுமை ஒதுக்கீடு வெட்டு என்ற கொடூரமான இடத்திற்கு வந்து நிற்கிறது மோடி அரசு. இப்போது வெளிநாடுகளுக்கு ஏற்று மதி இல்லை என்று அறிவிக்கிறது. இந்தியாவை நம்பி இருந்த பல நாடுகளிடம் இத்தகைய வெட்ககரமான அவப்பெயருக்கும் மோடி அரசு உள்ளாக்கியுள்ளது. 

கடந்த 16 ஆண்டுகளில் முதன்முறையாக மத்திய உணவு தானிய தொகுப்பில் கோதுமை கையிருப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஜுன் மாத துவக்கம் முதல் வெறும் 311.42 லட்சம்  டன் கோதுமை மட்டுமே கொள்முதல் செய்யப் பட்டிருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 602.91 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கோதுமை மத்திய தொகுப்பிற்கு கொள்முதல் செய்யப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு விதிகளின்படியே கூட, இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பு விதிகளின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 1 அன்று நிலவரப்படி மத்திய தொகுப்பில் அவசியம் 275.80 லட்சம் டன் கோதுமை இருப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இப்போது மத்திய தொகுப்பில் அந்த அளவிற்கு கோதுமை கையிருப்பு உள்ளதா என்று தெரியவில்லை. ஜூலை முதல் வாரம் கடந்துள்ள நிலையிலும், ஜூலை 1 அன்று எந்த அளவிற்கு கையிருப்பு இருந்தது என்ற வழக்கமான விபரத்தை வெளியிடுவதற்கு கூட ஒன்றிய அரசு மறுத்துள்ளது.

இது முற்றிலும் கிரிமினல்தனமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்  செயலாளர் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள் ளார். மக்களின் வாழ்வாதாரம் மீது, அன்றாட உணவின் மீது மோடி அரசு தொடுத்துள்ள ஈவிரக்கமற்ற தாக்குதல் இது.