ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 17ஆம் தேதி இரவு 24 வயதே ஆன தப்ரேஸ் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞரை மதவெறி பிடித்த ஒரு கும்பல் வழிமறித்து ஜெய்ஸ்ரீராம் மற்றும் ஜெய்ஸ்ரீ ஹனுமான் என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தியது. சொல்ல மறுத்ததால் திருட்டுப் பழியை சுமத்தி இரவு முழுவதும் மின்சாரக் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தது. பொழுது விடிந்ததும் அவரது உயிர் பிரிந்தது. இது போன்ற கும்பல் தாக்குதல் கள், படுகொலைகள் அடிக்கடி நடைபெற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை யின் கைகளை கட்டிவைத்திருக்கும் சக்தி எது? தப்ரேஸ் அன்சாரியை அடித்தபோது எடுக்கப் பட்ட இரண்டு வீடியோக்களில் அவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. முதலில் அவரிடம் பெயர் கேட்கப் படுகிறது. பிறகு ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீ ஹனுமான் என்று சொல்லச் சொல்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக எந்தெந்த மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறதோ அந்த மாநிலங்களில் எப்படியாவது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மக்களை மத ரீதியாக பிளவுபடுத்த முயற்சிக்கிறது. குஜராத் மாநி லத்தைப் போன்று மற்ற மாநிலங்களையும் மாற்றிட எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியே கும்பல் தாக்குதல்கள். தாக்கப்பட்ட அந்த நபர் உயிரி ழந்த பிறகும் தாக்கியவர்கள் மீது காவல்துறையினர் ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை. யாரையும் கைது செய்யவில்லை. இந்த லட்சணத்தில் பிரத மர் நரேந்திர மோடி முதல்முறையாக கும்பல் தாக்குதல்கள் குறித்து வாய் திறந்திருப்பதே பெரிய விஷயம்தான். குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடை பெற்ற விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய அவர், ஜார்க்கண்ட் சம்பவம்குறித்து மிகுந்த மன வேதனையடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று வழக்கம் போல் வீரவசனம் பேசியுள்ளார். அதே நேரத்தில் மாநில பாஜக அரசைக் காப்பாற்ற அவர் துணிந்தபோதுதான் யார் பக்கம் அவர் இருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. “மிகமோசமான மதரீதியான தாக்குதல் சம்ப வங்களுக்கு ஜார்க்கண்ட் மையமாக திகழ்கிறது’’ என்று கூறப்படுவதை தாம் எதிர்ப்பதாக கூறிய தன் மூலம், ஒரு குடிமகனைக் காப்பாற்றத் தவறிய தோடு குற்றத்தைத் தட்டிக்கேட்கும் திராணியை யும் பிரதமர் இழந்துவிட்டார். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் என்பதில் நாடே ஒருமித்த கருத்தை கொண்டிருப்ப தாக ஒருபக்கம் கூறிக்கொண்டே, இதுபோன்ற தாக்குதல்களை கண்டிக்கக்கூட அவர் வாயிலி ருந்து வார்த்தைகள் வரமறுக்கின்றன. வன்முறை குறித்து மாநில அரசிடம் விளக்கம் கேட்கவேண்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ ஏதும் நடக்காதது போல் மவுனமாக இருக்கிறார். வன்முறையாளர்களின் கையில் அதிகாரம் கிடைத்துள்ள நிலையில் நாட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?