headlines

img

அலறுவது ஏன்?

மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறை க்கு இதுவரை 142 பேர் பலியாகி விட்டனர். கிட்டத் தட்ட 60,000 பேர் வீடுகளை இழந்து முகாம்க ளில் தங்கியுள்ளனர். வன்முறையில் 5000 க்கும் மேற்பட்ட தீ வைப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக மாநில அரசே ஒப்புக்கொண்டுள்ளது. ஒரு சின்னஞ் சிறிய மாநிலத்தில் இத்தனை தீ வைப்பு சம்பவங்கள் என்றால் அங்கு அரசு நிர்வாகம் ஒன்று இருக்கி றதா எனக் கேட்க வேண்டியுள்ளது.

சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்த அறிக்கையில், வன்முறை தொ டர்பாக மொத்தம் 5,995 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், 6,745 பேரைப் பிடித்து விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அம்மாநிலத்தில் அமைதி நிலவினாலும் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. எந்தநேரத்தி லும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில் பள்ளிகள், கடைகள், வர்த்தக நிறுவ னங்கள், சந்தைகள் மூடப்பட்டுள்ளன.

இம்மாநிலத்தில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி இருபெண்களுக்கு இழைக்கப்பட்ட கும்பல் பாலி யல் வன்கொடுமை தொடர்பான  காணொலி வெளியான பின்னரே மாநில பாஜக அரசு அசை யத்தொடங்கியது. பிரதமரும் பேசத் தொடங்கி னார். சம்பவம் நடந்து 2 மாதங்கள் ஆகியும்  காணொலி வெளியாகும் வரை யாரையும் கைது செய்யாத அரசு, தற்போது 4 பேரைக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

தேசிய அளவிலும் சர்வதேச  அளவிலும் இந்தி யாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானத்தைத் தொடர்ந்து எழுந்த நிர்ப்பந்தம் காரணமாகவே குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வளவு நடந்த பின்னரும் மிக மோசமான சம்பவத்தைத்  திசை திருப்ப பாஜக தேசிய தலை வர்களும் அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வை யில் உலாவும் வலதுசாரிகளும் முயற்சிக்கிறார் கள். மே மாதம் நடந்த காணொலி ஏன் இப்போது அதுவும் நாடாளுமன்றம் கூடும்போது வெளியிடப் படுகிறது என்று கேட்கிறார்கள். மணிப்பூர் மாநி லத்தில் கலவரம் தொடங்கியவுடன் இணையத் தொ டர்புகளை ஒன்றிய அரசு துண்டித்ததே, அது இவர் களுக்குத் தெரியாதா?

பில்கிஸ் பானுவை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிகளுக்கு சிறை வாசலில் மாலை அணி வித்து வரவேற்பு அளித்தவர்கள், மல்யுத்த வீராங்க னைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைக்கு நீதி கேட்காதவர்கள், ஹத்ராஸ் கிரா மத்தில் தலித் பெண்ணை வல்லுறவுக்குள்ளாக் கியவர்களை ஆதரித்தவர்கள்,  உன்னாவ் பாலியல்  வன்கொடுமைக்குப் பொறுப்பானவர்கள், உத்தர கண்ட் மாநிலத்தில் ஓட்டல் வரவேற்பாளராக இருந்த அங்கிதா பண்டாரியைக் கொலை செய்தவர்களி டம் நீதி நியாயத்தை எதிர்பார்க்கமுடியாது. 

எனவேதான், மணிப்பூர் சம்பவம் குறித்து யாராவது பேசினால் அலறுகிறார்கள் அல்லது எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். மூச்சுக்கு மூச்சு, பாரத் மாதா கீ ஜே என முழங்குபவர்கள், நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள்  புரிந்து கொள்ள மணிப்பூர் நிகழ்வுகள் மேலும் ஓர் உதாரணம்.