பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைநகர் தில்லியில் மல்யுத்த வீராங் கனை வினேஷ் போகத் உள்ளிட்டோர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மல் யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளு மன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண்சிங் தான் அந்த குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்.
அவருக்கு மட்டுமல்ல 10க்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதும் இந்த போராட்டத்தால் தெரியவந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு எழுந்தவுடன் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் பொறுப்பில் இருந்து பிரிஜ் பூஷன் நீக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் அதைச் செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து செய்தது.
ஆளுங்கட்சியை சேர்ந்த எம்பி என்ற ஒரே காரணத்தால் பிரிஜ்பூஷன் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஒப்புக்கு விளையாட்டு அமைச்சகம் அமைத்த குழு, பாலி யல் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து ஒரு மாதம் ஆகிறது. ஆயினும் நடவடிக்கை ஏதுமில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நமது நாட்டில் பெரும்பாலான விளையாட்டு அமைப்புகளுக்கு அரசியல் செல்வாக்கு மிக்க வர்கள் அல்லது பெரும் தொழிலதிபர்கள் ஆகி யோரில் ஒருவரே தலைமை தாங்குகிறார்கள். விளையாட்டுக்குத் தேவையான உள் கட்ட மைப்புகளையும் விளையாட்டு சாதனங்கள் மற்றும் போட்டிகளுக்கான விளம்பரதாரர் ஆகி யவற்றுக்கு ஏற்பாடு செய்து தருகிறார்கள் என்பதால் அவர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுகளை ஆட்சியாளர்கள் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. பிரச்சனை பெரிதா கும்போது பாதிக்கப்பட்ட நபரை அழைத்து சமா தானமாகச் செல்லுமாறு அழுத்தம் தருகிறார் கள். இதனால் வீராங்கனைகள் பலர் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லை குறித்து தைரியமாகப் பொதுவெளியில் சொல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
2010 முதல் 2020-ஆம் ஆண்டு வரை இந்திய விளையாட்டு ஆணையம் பெற்றுள்ள 45 பாலியல் தொல்லை புகார்களில் 29 புகார்கள் பயிற்சியாளர்களுக்கு எதிரானவை. அந்த பயிற்சியாளர்கள் மீது சிறிய அளவிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
விளையாட்டில் பெண்களின் பங்களிப்பு அதி கரித்து வரும் இந்த காலகட்டத்தில் அதற்கு ஏற்ப பெண் பயிற்சியாளர்களும், உதவியாளர்களும் அதிகரிக்கப்பட வேண்டும். “ஆண் பயிற்சியா ளர் இருந்தால் அங்கே ஒரு பெண் உதவியாளர் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் பல நேரங்களில் இந்த விதி மீறப்படுகிறது. விளை யாட்டு அமைப்புகளில் பாலியல் தொல்லை புகார்களைக் கையாள பாலியல் தொல்லைத் தடுப்புக் குழு அமைப்பது கட்டாயம். இவற்றை யெல்லாம் ஒன்றிய அரசு உறுதிப்படுத்த வேண் டும். பெண்கள் பாதுகாப்பு பாஜக ஆட்சியில் பேச்சளவில்தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.