headlines

img

ஏன் இந்த அவசரம்? ஆத்திரம்?

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் இந்த சட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே இல்லை என்றும் எதிர்க்கட்சி யினர் வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தச் சட்டத்தை பயன்படுத்த முயல்கிறார்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி யுள்ளார்.

இஸ்லாமிய மக்களின் புனிதக் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு துவங்கும் நாளில் இந்தச் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரு கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிய நிலையில், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. அனைத்து எதிர்க் கட்சிகளும் இந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளன.

கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட சட்டப் பேர வைகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோடு இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவ தில்லை என கேரள, தமிழக முதல்வர்கள் அறி வித்துள்ளனர். இந்த நிலையில்தான் மாநி லங்கள் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்க முடியாது என்று கூறுவதன் மூலம் இஸ்லா மிய மக்கள் மற்றும் இலங்கை தமிழர்களின் குடியுரிமைக்கு வேட்டு வைக்கும் அமித்ஷா கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் குழிபறிக்கிறார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக மற்றும் பாமக உறுப்பினர்கள் ஆதர வளித்ததால்தான் இந்தச் சட்டத்தை ஒன்றிய பாஜக அரசினால் நிறைவேற்ற முடிந்தது. ஆனால் இப்போது அதிமுக இந்தச் சட்டத்தை எதிர்ப்பதாகக் கூறுவது நாட்டு மக்களை ஏமாற்ற நடத்தும் நயவஞ்சக நாடகமாகும்.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்ட குடியுரிமை சட்டத்தை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டிய அவசியம் என்ன? நாட்டு மக்களை மத அடிப்படையில் பிரித்து தங்களது குறுகிய வாக்கு வங்கி அரசியலுக்காக பயன் படுத்த முயல்வது பாஜகதான். ஆனால் எதிர்க் கட்சிகளை நோக்கி அமித்ஷா சுட்டுவிரல் நீட்டுவது அர்த்தமற்றது.

உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்ட போது இந்தச் சட்டம் நடைமுறைக்கு வராத தால் விசாரிக்க வேண்டியதில்லை என திசை திருப்பிய ஒன்றிய அரசு இப்போது உடனடியாக நடைமுறைக்கு இந்தச் சட்டம் வந்துள்ளதாக கூறுவது ஏன்?  

உச்சநீதிமன்றம் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியா வில் குடியேறிய இலங்கை தமிழர்களின் குடியுரி மையையும் மறுக்கும் இந்தச் சட்டத்தை அனைத்துத் தரப்பினரும் எதிர்க்க வேண்டியது தேசபக்த கடமையாகும்.