headlines

img

பகவத் சொல்கிறார்! மோடி செய்கிறார்!!

இந்திய நாட்டின் பாரம்பரிய பண்புகளான பன்மைத்துவம் வேற்றுமையில் ஒற்றுமை, மதச் சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவை இன்றைய ஆட்சியாளர்களான ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேவகர்களுக்கு துவக்கத்திலிருந்தே பிடிக்க வில்லை. அதனால் இந்தியா குரங்கு கையில் பூமாலைபோல் சிதறடிக்கப்படுகிறது. 

மோடியின் ஆட்சி அதன் அந்திமக் காலத் தில் இருப்பதால் இனி மீண்டும் ஒருமுறை ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைக்காது என்ப தால் போவதற்குள் என்னென்ன குளறுபடிக ளையும், சீர்குலைவுகளையும் செய்திட முடியுமோ அவ்வளவையும் செய்திடும் காரியத்தில் இறங்கியிருக்கிறது. 

எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாட்னா, பெங்க ளூரு, மும்பை என கடந்து கெட்டிப்பட்டுள்ள சூழ்நிலையில் அதன் பெயரான இந்தியா ஒன்றிய ஆட்சியாளர்களை  தூங்கவிடாமல் தொந்தரவு செய்கிறது. அதனாலேயே இந்தியா என்கிற பெயர் அவர்களுக்கு எட்டிக்காயாக கசக்கிறது. திடீர் ஞானோதயம் கொண்டு அது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் என்று கூறியது. மூன்று சட்டங்களின் பெயர்களில் இருந்த இந்தியாவை பாரத்... என்றும் மாற்றியது. அப்படி இந்து மதம் எனும் பெயரை மாற்றுவார்களா? 

இந்திய வரலாற்றில் தொடர்புடைய வெளி நாட்டினரால் தான் சிந்து நதி பாயும் நாடு என் பதை குறிக்கும் வகையில் இந்த நாடு இந்தியா என்று அழைக்கப்பட்டது. ஆரியர்கள் இந்தி யாவில் குடியேறிய பகுதி ஆரிய வர்த்தம் என்று  அழைக்கப்பட்டது. அதையே பின்னர் பாரத வர்ஷம் என்று புராணங்கள், அவர்களின் இலக்கியங்களில் குறிப்பிட்டனர். 

ஆர்எஸ்எஸ், அதன் பரிவாரங்கள் கொண் டாடும் இந்திய அரசர்களின் காலத்தில் எப்போ துமே பாரதம் என்று இந்த நாடு குறிப்பிடப்பட வில்லை. பிற்கால புராணக்கதைகளைக் கொண்டு பாரதம் என்று பிராமணிய மேலாதிக்கம் அமைந்த காலத்தில் குறிப்பிட்டனர். அதையே சுதந்திர போராட்டக் காலத்திலும் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட காலத்திலும் திணிப்பதற்கு  முயன்றனர். ஆயினும் இந்தியா எனும் பாரதம் மாநிலங்களின் ஒன்றியம் என்றே அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் செப்டம்பர் 1 அன்று இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்ற சொல்லையே வழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதையடுத்து தற்போது வரும் 9,10 தேதிகளில் நடைபெறும் ஜி20 மாநாட்டையொட்டி குடியரசு தலைவர் நடத்தும் இரவு விருந்து அழைப்பித ழில் பாரத் ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டிருக்கி றது. இது, இதுவரையில்லாத புதிய நடைமுறை யாக உள்ளது. அத்துடன், வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் பாரத் பெயர் மாற்ற மசோதா தாக்கல் செய்யப்படக்கூடும் என்கிற தகவல்கள் வெளிவருகின்றன. இது ஆர்எஸ்எஸ் கட்டளையையே பாஜக அரசு செயல்படுத்து கிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.