எதிர்வரும் பிப்ரவரி 23, 24ல் நடைபெறப் போகும் வேலைநிறுத்தம் மக்களின் கவனத்தை, ஆதரவை ஈர்ப்பதாக மாறி வருகிறது. கடந்த சில அகில இந்திய வேலை நிறுத்தங்களிலும் தொழிற் சங்க இயக்கத்தின் பலத்தையும் விஞ்சி தன்னெழுச்சியாக தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சங் பரிவாரின் கட்டுப்பாட்டில் இயங்குகிற தொழிற்சங்க அமைப்பான பாரதீய மஸ்தூர் சங் (பி.எம்.எஸ்). பொதுச் செயலாளர் பினாய் குமார் சின்கா பிரதமருக்கு கடந்த ஜூலை 20, 2021 அன்று எழுதிய கடிதத்தில், “பல காரணங்களினால், நாடு பல எரியும் பிரச்சினை களை எதிர்கொண்டும் கூட, 6 ஆண்டுகளாக முத்தரப்பு சந்திப்பான ‘இந்தியன் லேபர் கன்வென்சன்’ (ILC)கூடவில்லை” எனக் குறிப்பிட்டி ருந்தார்.
2015இல் தான் கடைசியாக ஐ.எல்.சி கூட்டம் நடைபெற்றது. ஒவ்வோராண்டும் இந்த சந்திப்பு நடந்திருக்க வேண்டும்.
“தொழிலாளர் பிரச்சனையில் அரசு காட்டுகிற முனைப்பை, கள நிலமைகள் பற்றிய உண்மை நிலைமையை எடுத்துரைக்கிற சரியான அளவு கோள்கள் இந்த சந்திப்புகளில்தான் அரசுக்கு கிடைக்கும்” என்றும் அக்கடிதம் அரசிடம் மன்றாடியது. ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற இக்கடிதம் எழுதப்பட்டு இன்னொரு 6 மாதங்கள் ஓடிவிட்டன.
அதே பி.எம்.எஸ் தலைவர், “அரசின் எல்லா பண மாக்கல், தனியார்மயம், நிறுவனமயம் தொடர்பான நடவடிக்கைகளை எதிர்க்கிறோம். அரசு அனைத்து ஜனநாயக நெறிகளின் எல்லைகளையும் மீறு கிறது” என்று 2021 அக்டோபர் 18 அன்று மீண்டும் அரசுக்கு கடிதம் எழுதினார். இதை விட கடுமை யான வசனம் வேறு எதுவும் இருக்க முடியுமா? இப்படி பேசியும் 3 மாதங்கள் கழிந்துவிட்டன.
இதோ அதே தலைவர், பிரதமருக்கு 2022 ஜனவரி 8 அன்று மூன்றாவது கடிதம் எழுதியுள்ளார். “பிரதமரை, அமைச்சர்களை அணுகுகிற முயற்சி வெற்றி பெறவில்லை. அரசுக்கு உழைப்பாளி மக்களுக்காக உழைக்கிற எண்ணம் இல்லை. ஆகவே போராடுவதை தவிர வேறு வழியில்லை; அரசின் தனியார்மயம், பங்கு விற்பனை, நிறுவன மயம், முக்கிய துறைகள் விற்பனை, பணமாக்கல் ஆகியன மூலமாக பொதுத்துறை மீது தாக்குதல் தொடுப்பதை எதிர்ப்போம். அரசு ஊழல் அதிகார வர்க்கத்திடம் இருந்தும், உள் லாபம் கொண்ட ஆலோசகர்களிடமிருந்தும் விலகி நிற்காவிட்டால் போராட்டம், எதிர்ப்பியக்கங்கள் என்கிற பாதையில் செல்வோம்” என்று குமுறியுள்ளார்.
இது ‘மனதின் குரல்’ என்று சொல்லாவிட்டா லும் உள் குரல் என்பது முக்கியமானது. ஆனால் இந்த குரலே அரசின் செவிகளில் விழவில்லை.
எப்படி இருப்பினும் பி.எம்.எஸ் தொழிற்சங்கத் தின் வார்த்தைகள் ஒன்றை தெளிவாக வெளிச்சத் திற்கு கொண்டு வந்துள்ளது. அரசாங்கத்தின் அழிவுப் பாதையை சகோதர அமைப்புகளாலேயே சகிக்க முடியவில்லை என்ற உண்மையை... இதைவிட பிப்ரவரி வேலைநிறுத்தத்தின் நியாயத்திற்கு சாட்சியம் வேண்டுமா!