headlines

img

மதிப்பிழந்தது யார்?

பணமதிப்பு நீக்க முடிவினை மேற்கொள்வ தற்கு ஒன்றிய அரசிற்கு உரிமை உள்ளது  என உச்ச  நீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு  தீர்ப்பளித்திருக்கிறது. அதில்  நீதிபதி நாகரத்தினா பெரும்பான்மை தீர்ப்பிற்கு மாறுபட்டு  இதுபோன்ற முக்கிய முடிவுகள் எடுக் கும்போது நாடாளுமன்றத்தை ஒதுக்கி வைக்க முடியாது.  நாடாளுமன்றம் இல்லாமல் ஜனநாய கம் தழைத்தோங்க முடியாது.  பணம் மதிப்பிழப்பு செய்வதற்குக் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறை சரி யாது அல்ல என அழுத்தமாகக் கூறியிருக்கிறார். 

உச்ச நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் விசார ணைக்கு எடுத்துக் கொண்ட போதிலும்,  பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குச் சொல்லப்பட்ட கார ணங்கள்  என்ன ? அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன ? அதனால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும்  அதற் கான நிவாரணம் என்ன என்பது குறித்துத் தீர்ப்பில் எதுவும் கூறப்படவில்லை.  ஒன்றிய அரசின் பொறுப்பற்ற பணமதிப்பிழப்பு நடவடிக் கையால் மட்டும் 125க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்திருக்கின்றனர். அந்த உயிர்களுக்கு நாட்டில் எந்த மதிப்பும் இல்லையா ? 

ஜனநாயக நாட்டில் சாமானிய மக்களின் கடைசிப் புகலிடம் நீதிமன்றங்கள்தான். அந்த நீதிமன்ற தீர்ப்பில் கூட  மனித உயிரிழப்புகளுக்கு இடமில்லை என்றால் அது எப்படி  நீதியாக  இருக்கும்?  மக்கள் நீதிமன்றங்களை நாடுவது நீதிக்காகத்தான் தீர்ப்பிற்காக அல்ல. பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது  ‘’நான் வெறும் 50 நாட்கள் மட்டுமே கேட்கிறேன்.  அதன் பிறகும் எனது நடவடிக்கைகளில் ஏதே னும் தவறு இருந்தால், நாட்டிற்காக எந்த தண்ட னையையும் அனுபவிக்கத் தயாராக இருக்கி றேன். என்னை நெருப்பில் போட்டு எரித்தாலும் தாங்கிக் கொள்ளத் தயார்” என்றார். 

எந்த மக்களும் தனது பிரதமர் நெருப்பில் உயி ரோடு எரிய வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார் கள். ஆனால் கறுப்புப்பணம், தீவிரவாதம், கள்ள  பணத்திற்கு எதற்கும் தொடர்பில்லாத சாமானிய மக்கள் ஏன்  வெயிலில் வெந்து துடிதுடித்து இறக்க வேண்டும்?  உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் கறுப்புப் பணம் ரூ.5 லட்சம் கோடி செல்லாததாக மாறி விடும் என உத்தரவாதம் அளித்தது என்ன ஆனது? ஆனால் 99.3 சதவிகித உயர் பணமதிப்பு கொண்ட நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியிருக்கிறது என ரிசர்வ் வங்கி கூறுகிறது. அப்படியென்றால் கறுப்புப் பணம்  எப்படி  வெள்ளையாக மாறியது ?

உயர் பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான 2016- 17 ஆம் நிதியாண்டில் மட்டும் 3,01,847 சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. அதற்க டுத்த 2017-18ஆம் நிதியாண்டில் 5,40,847 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்த நெருக்கடி எதனால் ஏற்பட்டது? ஒன்றிய அரசிற்கு அதி காரம் இருக்கிறது என்பதற்காக, மக்களைப் பற்றி அவர்களின் நலனைப்பற்றி கவலை கொள்ளா மல் என்ன வேண்டுமானாலும் செய்திடலாமா? 

அப்படிச் செய்ய முடியும் என்றால் இங்கே உண்மையில் மதிப்பிழந்திருப்பது இந்திய அரசி யல் சாசனமும், ஜனநாயகமும்தான்.