headlines

img

எதேச்சதிகாரம்!

ஒரு நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகம் எப்படிச் செயல்படக்கூடாது என்பதற்கு மோடி அரசு முன்னுதாரணமாக மாறியிருக்கிறது. இது அவர் சார்ந்திருக்கும் பாசிசத் தன்மை கொண்ட பாஜகவிற்கு உகந்ததாக இருக்கலாம், ஆனால் இந்திய நாடாளுமன்றத்திற்கு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சி  பெண் களை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய காட்சி யைப் பார்த்து உலகமே காரி உமிழ்கிறது. அந்த நிகழ்வு குறித்து வெளியில் வெறும் 36 வினாடிகள் மட்டும் பேசிய பிரதமர் நாடாளுமன்ற அவைக் குள் சென்று பேச மறுக்கிறார். ஆளும் கட்சியி னரே நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கு கின்ற அவலமும் அரங்கேற்றப்படுகிறது. 

அதே நேரத்தில் மாநில அரசின் அதிகாரங்க ளைப் பறிக்கும் மசோதாக்களை எவ்வித விவாத முமின்றி சட்டவிரோதமாக நிறைவேற்றுகிறது. குறிப்பாகக் கூட்டுறவு மசோதா, தேசிய நர்சிங் ஆணைய மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோ தாக்கள்  நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அரசின் மீதான நம்பிக்கையில்லா  தீர்மானத்தை  விவாதிக்க ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக ஏன் அவசரமாக மசோதாக் களை நிறைவேற்ற வேண்டும் ?

2004 முதல் 2009 வரையிலான 14-ஆவது மக்க ளவையில் 60 சதவிகித மசோதாக்களும், 15-ஆவது மக்களவையில் 71 சதவிகித  மசோதாக்களும் நாடாளுமன்ற குழுக்களின் பரிந்துரைக்கு அனுப் பப்பட்டன. ஆனால் பாஜக தலைமையிலான மோடி அரசு ஆட்சிக்கு வந்த  16-ஆவது மக்கள வையில்  27 சதவிகித மசோதாக்கள் மட்டுமே நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.  இதிலிருந்தே மோடி அரசு ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து பாசிச தன்மை கொண்ட சர்வாதிகாரத்தை நிலை நிறுத்திட முயல்வதைப் புரிந்து கொள்ள முடியும். 

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தேர்தலில் வெற்றி பெறும் கட்சி அவையில் பெரும் பான்மை பலம் கொண்டதாக இருக்கலாம். ஆனால் அந்த கட்சிகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 37.7 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது. அதற்கு எதிராக 62.3 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கிறது. 

மக்களவையில் பெரும்பான்மை இருக்கிறது என்பதால் கேள்வி நேரம், விவாதம், வாக்கெ டுப்பு எல்லாவற்றையும் புறக்கணித்து ஆணவத் துடன் சட்டங்களை நிறைவேற்றுவது நாடாளு மன்ற ஜனநாயகத்திற்கே விரோதமானது. ஆளும் கட்சியை விட மற்றவர்களுக்கே அதிகமான மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அவர்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவு செய்திட அனுமதிக்க வேண்டும். அதுதான் உண் மையான நாடாளுமன்ற ஜனநாயகம் ஆகும். 

ஆனால் மோடி அரசை எதிர்த்து கேள்வியே கேட்கக்கூடாது, யாருக்கும் பதில்சொல்ல வேண்டிய அவசியமுமில்லை என்ற நிலையை உருவாக்குகிறது. இனி நாடாளுமன்றத்திலும்  ஜனநாயகம் இருக்காது என்பதன் அறிகுறியே ஆகும். மோடி அரசைத் தூக்கி எறிவதன் மூலமே நாடாளுமன்ற ஜனநாயகத்தை மட்டுமல்ல இந்திய தேசத்தையே பாதுகாக்க முடியும்.